தென் மாவட்ட ரயில்களின் பாதை மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

அதே நேரத்தில், நவ.1, 8, 11, 15 தேதிகளில் மதுரையிலிருந்து மாலை 3.30 மணிக்கு எழும்பூர் நோக்கி செல்லும் தேஜஸ் விரைவு ரயில் (எண்: 22672) 45 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், நவ.1, 8, 11, 15 தேதிகளில் மதுரையிலிருந்து மாலை 3.30 மணிக்கு எழும்பூர் நோக்கி செல்லும் தேஜஸ் விரைவு ரயில் (எண்: 22672) 45 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
download (57)

மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சில தென் மாவட்ட விரைவு ரயில்கள் நவம்பர் மாதத்தின் குறிப்பிட்ட தேதிகளில் வழக்கமான பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, நவம்பர் 1, 6, 8, 11, 13, 15 தேதிகளில் நாகர்கோவில் இருந்து காலை 8 மணிக்கு கோவை நோக்கி செல்லும் விரைவு ரயில் (எண்: 16321) மற்றும் கோவையிலிருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவில் நோக்கி செல்லும் ரயில் (எண்: 16322) வழக்கமான பாதைக்கு பதிலாக விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி – கரூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

Advertisment

மேலும், நவம்பர் 1, 8, 11, 15 தேதிகளில் மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயில் (எண்: 16847) திருச்சி – காரைக்குடி – மானாமதுரை – விருதுநகர் வழியாக இயக்கப்பட உள்ளது. பிற மாநில ரயில்களில், நவ.1, 8, 15 தேதிகளில் நாகர்கோவில் – கச்சிக்குடா ரயில் (எண்: 16354) மற்றும் நவ.11 தேதியில் நாகர்கோவில் – மும்பை சிஎஸ்டி ரயில் (எண்: 16340) விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி – கரூர் வழியாக இயங்கும்.

மேலும், குஜராத் மாநில ஓகாவிலிருந்து நவ.4 மற்றும் 11 தேதிகளில் காலை 8.40 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் (எண்: 16734) கரூர் – திருச்சி – மானாமதுரை வழியாக இயக்கப்படும். மற்ற மாற்றங்களில், நவ.6, 13 தேதிகளில் மதுரையிலிருந்து பிகானூர் அனுவ்ரத் விரைவு ரயில் (எண்: 22631), நவ.10 தேதியில் குருவாயூரிலிருந்து எழும்பூர் செல்லும் ரயில் (எண்: 16128), நவ.9 தேதியில் பனாரஸிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தமிழ் சங்கமம் விரைவு ரயில் (எண்: 16368) ஆகிய ரயில்களும் வழக்கமான பாதைக்கு பதிலாக விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளன.

அதே நேரத்தில், நவ.1, 8, 11, 15 தேதிகளில் மதுரையிலிருந்து மாலை 3.30 மணிக்கு எழும்பூர் நோக்கி செல்லும் தேஜஸ் விரைவு ரயில் (எண்: 22672) 45 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. பயணிகள் இதனை முன்னோட்டமாக கவனித்து பயணத் திட்டங்களை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: