ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ரயில்

ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

அதன்படி, மே 14-ம் தேதியிலிருந்து ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் காலை மாலை 6 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கும், 2-வது சேவை காலை 10.45 மணிக்கு பதில் 10.30 மணிக்கும், 3-வது சேவை பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும் புறப்படும்.

ராமேசுவரம்-திருச்சி எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.50 மணிக்கு பதில் 3 மணிக்கு புறப்படும். ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு 
புறப்படும். 

ராமேசுவரம்-கோவை எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.55 மணிக்கு புறப்படும். ராமேசுவரம்-சென்னை சேது எக்ஸ்பிரஸ் இரவு 8.35 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும்.

Advertisment
Advertisements

மே 15-ம் தேதியிலிருந்து, ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ் பிரஸ் மாலை 4.20 மணிக்கு பதில் 4.30 மணிக்கு புறப்படும். ஜூன் 7-ம் தேதியிலிருந்து ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரவு 9.10 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு புறப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 6 விரைவு இரயில்களில் கூடுதலாக தலா ஒரு முன்பதிவு பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. 

முத்துநகர் விரைவு ரயில் (தூத்துக்குடி - எழும்பூர்): மே 15 வரை முத்துநகர் விரைவு ரயில் (எழும்பூர் - தூத்துக்குடி): மே 14 -16 வரை அமிர்தா விரைவு ரயில் (திருவனந்தபுரம் - மதுரை): மே 14 முதல் 15 வரை அமிர்தா விரைவு ரயில் (மதுரை - திருவனந்தபுரம்): மே 15 முதல் 16 வரை தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (மே 14 ) நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (மே 15 ) என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Southern Railway Train

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: