அரசின் சேவைகள் மக்களை முழுமையாகச் சென்றடைகிறதா? திருச்சி ஆட்சியர் நேரடி கள ஆய்வு

அவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-06-18 at 2.53.17 PM

Trichy

தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அரசின் சேவைகள் மக்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம்.

Advertisment

பத்தாளபேட்டை கூத்தபார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பரிசோதித்தார். இதைத் தொடர்ந்து, கிருஷ்ண சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று, அங்கு நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

WhatsApp Image 2025-06-18 at 2.53.16 PM (1)

WhatsApp Image 2025-06-18 at 2.53.16 PM

Advertisment
Advertisements

WhatsApp Image 2025-06-18 at 2.53.18 PM

கிராம மக்களின் வாழ்வாதாரமான கல்விக்கும் முக்கியத்துவம் அளித்த மாவட்ட ஆட்சியர், அவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஆசிரியர்களிடம் கற்பிக்கும் முறைகள் குறித்துக் கேட்டறிந்து, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
 
இறுதியாக, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

க.சண்முகவடிவேல்

 

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: