மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பம்: பொன்னாடை போர்த்தி வாழ்த்திய திருச்சி சமூக ஆர்வலர்கள்

மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சியில் கடந்த 2009 முதல் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பாராட்டி, கெளரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சியில் கடந்த 2009 முதல் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பாராட்டி, கெளரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை, மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

Advertisment

மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சியில் கடந்த 2009 முதல் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பாராட்டி, கெளரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்து வரும் சகாய மரியநாதன் என்பவர் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகின்றார்.

பஞ்சப்பூா் பகுதியில் கட்ந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் மரியநாதன் படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க சகாய மரியநாதனின் உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.

Advertisment
Advertisements

இதனைத் தொடர்ந்து அவரின் கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒரு நோயளிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும், இரு கண்கள் திருச்சியில் கண் பார்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும், உடலின் தோல், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும் தானமாக பெறப்பட்டன.

Trichy

இந்தநிலையில் உடலுறுப்பு தானம் செய்த அக்குடும்பத்தினரை பாராட்டி கௌரவிக்கும் வகையில், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், மக்கள் சக்தி இயக்க மாவட்டச் செயலாளர் ஆர். இளங்கோ, நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, வெ.ரா.சந்திரசேகர் உள்ளிட்டோர் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அந்த குடும்பத்தினரை பாராட்டி, கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: