தங்கைக்கு அண்ணனின் சீர்... சமயபுரம் மாரியம்மனுக்கு ஶ்ரீரங்கத்தில் கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்​கள், வளையல், பூக்கள்!

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
Trichy Srirangam Ranganathaswamy Temple seer varisai thattu to Samayapuram temple Tamil News

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

Advertisment

திருச்சி சமயபுரம் மாரி​யம்மன் கோயி​லில் கடந்த 3-ம் தேதி தைப்​பூசத் திரு​விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் கண்ணாடி பல்லக்​கில் எழுந்​தருளிய அம்மன் கோயி​லில் இருந்து புறப்​பட்டு, வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளினார். பின்னர், மண்ணச்​ச நல்​லூர் நொச்​சியம் வழியாக வடகா​விரி எனப்​படும் கொள்​ளிடம் ஆற்றை வந்தடைந்​தார். அங்கு அம்மன் தீர்த்​தவாரி கண்டருளினார்.

அப்போது, அம்மனின் அண்ணன் முறையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மாரி​யம்​மனுக்கு சீர்​வரிசை கொடுப்​ப​தற்காக கருட மண்டபத்​தில் எழுந்​தருளினார். அங்கிருந்து வாண வேடிக்கை​யுடன், மேள தாளங்கள் முழங்க கோயில் இணை ஆணையர் மாரியப்பன் உள்ளிட்​டோர் சீர்​வரிசைப்பொருட்களை எடுத்​துக் கொண்டு நேற்று முன்​தினம் இரவு வடகா​விரியை வந்தடைந்​தனர்.

Advertisment
Advertisements

அங்கு சீர்​வரிசை பொருட்களை சமயபுரம் கோயில் இணைஆணையர் பிரகாஷிடம் முறைப்படி வழங்​கினர். பின்னர், பட்டு வஸ்திரங்​கள், வளையல், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய சீர்​வரிசைப் பொருட்களை கொண்டு அம்மனுக்கு அலங்​காரம் செய்யப்​பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு வடகா​விரி​யில் இருந்து கண்ணாடி பல்லக்​கில் அம்மன் புறப்​பட்​டார். வழிநெடுக மண்டகப்படி மரியாதைகளை பெற்​றபடி இரவு 11 மணிக்கு சமயபுரம் கோயிலை வந்தடைந்​தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Trichy Srirangam Ranganathaswamy Temple srirangam samayapuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: