இந்நிலையில் இந்த ஒரு ரெசிபி செய்தால் போதும். இதை வைத்து 50 வகையான வெவ்வேறு உணவு வகைகளை செய்ய முடியும். இந்த ஒரு கிரேவி போதும்.
தேவையான பொருட்கள்
அரை கப் எண்ணெய்
4 பெரிய வெங்காயம்
8 தக்காளி
4 துண்டு இஞ்சி
8 பச்சை மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட்
2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தூள்
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
2 பட்டை
3 பிரிஞ்சி இலை
5 முதல் 6 ஏலக்காய்
8 கிராம்பு
15 முந்திரி
1 டேபிள் ஸ்பூன் உப்பு
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளியை நன்றாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில், மிளகாய் தூள், கொத்தமல்லி, மஞ்சள் பொடி தண்ணீருடன் சேத்து கலக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து வதகக்வும். தொடர்ந்து இந்த பொடி கலந்த தண்ணீரை சேர்க்கவும். உப்பு தொடர்ந்து சேத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும். தொடர்ந்து பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இது நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும். தொடர்ந்து முந்திரி பேஸ்டை சேர்த்து வதக்கவும். 5 நிமிடங்கள் வரை வதக்கவும். எண்ணெய் பிரிந்து வர வேண்டும். இதை நாம் ஸ்டோர் செய்து வைத்துகொள்ளலாம். இதில் நமக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து சைடிஷ் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“