Advertisment

திருப்பதியில் பங்குனி மாத பவுர்ணமி தெப்ப உற்சவத் திருவிழா; திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பங்குனி மாத பவுர்ணமி தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி புஷ்கரணியை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

author-image
WebDesk
New Update
tirupati

திருப்பதி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருப்பதியில் பங்குனி மாத பவுர்ணமி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Advertisment

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 20-ம் தேதியில் இருந்து தெப்ப உற்சவத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தெப்ப உற்சவத் திருவிழா தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பங்குனி மாத பவுர்ணமி தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி புஷ்கரணியை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த தெப்ப உற்சவம் திருவிழா நடைபெறும் 5 நாள்களில், திருப்பதி ஏழுமலையானுக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment