Advertisment

போட்டியில் ஜெயிப்பதை விட அம்மாவாக ஜெயிப்பது முக்கியம்.. தாய்ப்பால் கொடுத்த வீராங்கனைக்கு பாராட்டு!

மலையேறும் மரத்தான் போட்டிகள் அவ்வளவு எளிதானது அல்ல.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போட்டியில் ஜெயிப்பதை விட அம்மாவாக ஜெயிப்பது முக்கியம்..  தாய்ப்பால் கொடுத்த வீராங்கனைக்கு பாராட்டு!

வீராங்கனை

மராத்தான் போட்டிக்கு இடையில் அம்மாவாக தனது கடமையை நிறைவேற்றிய வீராங்கனைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

தாய்ப்பால் வீராங்கனை:

பிரான்ஸில் வருடந்தோறும் மலையேறும் மரத்தான் போட்டிகள் நடைபெறும் அந்த வகையில் இந்தாட்னு நடைப்பெற்ற மலையேறும் நெடுந்தொலைவோட்டப் போட்டியில்  பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் தான் வீராங்கனை சோபியா பவர்.  பெயரில் மட்டுமில்லை  இவர் செய்யும் செயல்களும் பவர் தான். இந்த மரத்தான் போட்டியில் சோபியா 170 கிலோமீட்டர் தூரத்தை 43 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதே நேரத்தில்  ஒரு தாயாக தனது கடமையௌம் சரியாக செய்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

திருமணமான சோபியாவுக்கு 5 வயதில் ஒரு மகனும்,  3 மாதங்கள் ஆகும் கைக்குழந்தையும் உள்ளனர். தனது கணவர் மற்றும் குடும்பத்தாரிடன் உதவியுடன் இந்த மரத்தான் போட்டியில் கலந்துக் கொண்ட  சோபியா, ஒருபக்கம் மலையேறிக் கொண்டு தனது சாதனையை தொடர்ந்தார்.

வீராங்கனை

மறுபக்கம்  பசியால் அழும் தனது கைக்குழந்தைக்கு இடையில் இடையில் தாய்ப்பாலும் அளித்தார்.  சோபியாவின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ தொடங்கியது.  பலருமவரின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.

சோபியா மலையேறு மற்ற நேரங்களில் அவரின் கணவர், தனது இரண்டு பிள்ளைகளையும் பத்திரமான பார்த்துக் கொண்டார். இதுக் குறித்து சோபியா பகிர்ந்துக் கொண்டா உணர்ச்சிபூர்வமான வரிகள்,” மலையேறும் மரத்தான் போட்டிகள் அவ்வளவு எளிதானது அல்ல.

இடையில் கிடைக்கும் ஒய்வு மிகவும் முக்கியமானது. ஆனால் போட்டியில் ஜெயிப்பதை விட அம்மாவாக ஜெயிப்பது தான் முக்கியம்” என்று தெரிவித்தார்.

 

 

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment