பாலில் மஞ்சள் பொடி சேர்த்து குடித்தால் சளி, இருமல் குணமாகும் என்பது நமக்கு தெரியும். இந்நிலையில் இது மட்டும் அல்லாது அதிக பயன்கள் இதில் இருக்கிறது. ஆனால் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஜீரணத்தை ஊக்கப்படுத்த, புண்கள் குணமாக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது.
மஞ்சள் சேர்ந்த பால், ஆர்த்ரைட்டிஸ் வலிகளை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். இதில் உள்ள குர்குமின், மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலை சேதத்திலிருந்து காப்பாற்றுகிறது. இதில் உள்ள குர்குமின் ஒட்டுமொத்த உடலின் நன்மைக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து நம்மை காப்பாற்ற உதவும்.
அஜீரணம் மற்றும் வயிறு உப்புதலால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தால், இந்த மஞ்சள் சேர்த்த பாலை குடிக்க வேண்டும். இது கல்லீரலில் பைல் சுரப்பதை தூண்டும். இதனால் கொழுப்பு சத்தை சரியா ஜீரணிக்க உதவும்.
மூளையின் ஆரோக்கியத்திற்கு இது உதவும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள சத்து, மூளையின் செல்களை வளர்ச்சியை அதிகரிக்கும். வயதாவதால் ஏற்படும் மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் சிக்கலை குறைக்கும்.
இது ஆண்டி செப்டிக், வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கொண்டது. மேலும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான குணம் உள்ளதால், புண்களை குணப்படுத்தும். மேலும் காயங்களை குணப்படுத்தும்.
இது இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். சமீபத்தில் நடந்த ஆய்வில் இதில் உள்ள குர்குமின், ரத்த குழாய்களை வலுப்படுத்தும். இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் இது கொலஸ்ட்ரால், அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை இது குணப்படுத்தும் என்பதால், நாம் மஞ்சள் கலந்த பாலை குடிக்கலாம்.
செய்முறை: ஒரு கப் பாலை சூடு செய்ய வேண்டும். அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள், கால் டீஸ்பூன் மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி குடிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“