/indian-express-tamil/media/media_files/2025/06/03/kyzvjaD8RuRHQwUSO7xP.jpg)
தோசைக் கல் ஓரத்தில் படிந்திருக்கும் பிசுக்கு… ஈஸியா நீக்க இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க!
எல்லோரின் வீட்டிலும், தோசை கல் பயன்பாடு நிச்சயம் இருக்கும். இன்றைய காலத்தில் இரும்பு தோசை கல் பயன்பாட்டிற்கு பதிலாக ஈஸியாக தோசை வார்க்கும், நான்ஸ்டிக் தவா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நீண்ட நாள் உபயோகிக்காமல் இரும்பு தோசை கல், கிடப்பில் போடப்பட்டிருக்கும். சிலரது வீட்டில் சப்பாத்தி கூட சுட முடியாமல் ஓரங்களில் கரி பிடித்து இருக்கும். எனவே, இதுபோன்ற நீண்ட நாள் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தோசை கல்லினை எளிதில் எப்படி சுத்தம் செய்வது? என்பதை பற்றி இந்தப் பதிவின் காணலாம்.
டிப்ஸ்:1
முதலில், தோசை கல்லினை அடுப்பின் மீது வைத்து பற்றவைத்துக் கொள்ள வேண்டும். தோசை கல் நன்றாக சூடானதும், அடுப்பினை சிம்மில் வைத்து சால்ட் உப்பினை தூவி, எலுமிச்சம் பழத்தை ஸ்போர்க் ஸ்பூனில் குத்தி நன்கு தேய்த்து எடுத்தால் போதும், தோசை கல்லில் இருக்கும் அழுக்கு எல்லாம் சுத்தமாக வந்து விடும்.
டிப்ஸ்:2
தோசை கல்லின் ஓரங்களில் கரி பிடித்து இருந்தால், முதலில் அடுப்பினை பற்ற வைத்து தோசை கல்லினை வைக்க வேண்டும். பிறகு, சால்ட் உப்பினை தூவி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு தேய்க்க வேண்டும். தோசை கல்லில் இருக்கும் அழுக்கு எல்லாம் சுத்தமாக வந்துவிடும். தோசை கல்லின் ஓரங்களில் ஒட்டி இருக்கும் எண்ணெய் பிசுக்கு, கரி எல்லாம் சுத்தமாக நீங்கும். பிறகு குளிர்ந்த தண்ணீர் வைத்து சுத்தம் செய்தால், நன்றாக கழுவி விடுங்கள்.
டிப்ஸ்:3
இதையடுத்து, மீண்டும் தோசை கல்லினை அடுப்பின் மீது வைத்து வெங்காயம் வைத்து தேய்த்து, நன்றாக தோசை கல்லை தேய்த்து எடுங்கள். இப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி விட்டால் போதும், தோசை கல் சுத்தமாகி விடும். முதலில் இதில் முட்டை ஊற்றி ஆம்லெட் போட்டு பாருங்கள். அதன் பின்பு, இதில் தோசை சுட்டு பாருங்கள், மொறு மொறு தோசை ரெடியாகும். உங்களுக்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.