நம் அன்றாட வாழ்க்கையில் சமையலறைக்கு உபயோகமான பயனுள்ள சில வீட்டு குறிப்புகளை பார்க்கலாம். சமையலுக்காக தக்காளி வதக்கும்போது பச்சை வாசம் சீக்கிரம் போகுவதற்காக அதோடு கல் உப்பை மற்றும் மஞ்சள் சேர்த்து வதக்கலாம்.
தயிரை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் வெளியில் வைத்து விட்டுகிறோம் என்றால் அது விரைவில் புளித்து போகாமல் இருக்க சிறிய அளவு தேங்காயை தயிர் நடுவில் ஆழமாக பாத்திரத்தில் படுமாறு வைத்து விட்டு சென்றால் சீக்கிரம் புளித்து போகாது.
கடையிலிருந்து முட்டை வாங்கி வீட்டில் வைக்கும்போது முட்டையின் முக்கோணப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். அப்படி வைத்தால் முட்டை எளிதில் கெட்டுப்போகாமல் நீண்ட நாளைக்கு வைத்து பயன்படுத்தலாம்.
இதுவும் முட்டை சம்பந்தமான ஒரு குறிப்பு தான். நீண்ட நாட்களுக்கு முட்டையை வீட்டில் வைத்து பயன்படுத்தவோ அல்லது வெளியூர்களுக்கு செல்லும்போது அதனை பாதுகாக்க எளிதான வழிமுறை தான் இது. முட்டை மேல எண்ணெய் தடவி முக்கோணப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு வைத்து விட்டு சென்றால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
மழை மற்றும் பனிக்காலங்களில் உப்பு பாத்திரங்களில் தண்ணி விடாமல் இருக்க அதில் இரண்டு பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
அடுத்து உப்பை பாத்திரத்தில் போடுவதற்கு முன்பாக அதில் சிறிதளவு சோள மாவு சேர்த்தால் எளிதில் ஈரப்பதம் வராது. இதனால் உப்பு எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்கும்.
நம்ம கால்ல போடக்கூடிய செயின் அல்லது தோடு திருகாணி மரை சில நேரங்களில் லூசு ஆகி அடிக்கடி கலன்று விடும். அந்த மாதிரி வராமல் இருக்க சிலர் நூல் சுத்தி வைப்பது, பூண்டு சாறு வைப்பதும் உண்டு. ஆனால் இதற்கு பதிலாக திருகாணியில் நெயில்பாலிஷ் வைத்து போட்டால் கழன்று வராது.
முட்டை வேக வைக்கும்போது முதலில் அடுப்பை குறைத்து வைத்து பாதி வெந்தவுடம் அனல் கூட்டி வைக்கலாம். இதனால் முட்டை ஒன்றோடு ஒன்று உரசி உடையாமல் வேகும்.
வெங்காயமும் உருளைக்கிழங்கும் ஒரே இடத்துல ஸ்டோர் பண்ணா கூடாது. அப்படி வைத்தா சீக்கிரம் கெட்டுப் போயிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“