/indian-express-tamil/media/media_files/2025/04/04/9ABumjhEs0LRGozULRwV.jpg)
வீட்டை சுத்தமாக பராமரிப்பது என்பது கழிப்பறையையும் உள்ளடக்கியது. குறிப்பாக, கழிப்பறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.
அதன்படி, கழிப்பறையில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை அகற்றி எவ்வாறு தூய்மையாக பராமரிப்பது என்று தற்போது காணலாம். ஒரு பிளாஸ்டிக் கப்பில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சீவக்காய் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு ரூபாய் ஷாம்பூ பக்கெட்டை முற்றிலும் ஊற்றி கலக்க வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் புளித்த தயிரையும் சேர்த்து பசை பதத்திற்கு மீண்டும் கலக்க வேண்டும்.
இப்போது கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்ள வேண்டும். வீட்டில் கிளவுஸ் இல்லாதவர்கள், ஒரு பிளாஸ்டிக் பையை இறுக்கமாக கட்டிக் கொள்ளலாம். நாம் தயாரித்து வைத்திருக்கும் கலவையை ஒரு ஸ்க்ரப்பரில் தடவி, கழிப்பறையில் உப்புக் கறை படிந்து இருக்கும் டைல்ஸ்களில் தேய்க்க வேண்டும். இதற்காக கை வலிக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். லேசான அழுத்தத்துடன் தேய்த்தாலே போதுமானதாக இருக்கும்.
இவ்வாறு தேய்த்த பின்னர் டைல்ஸ் முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம். இப்போது டைல்ஸ்களை பார்ப்பதற்கு புதியது போன்று காட்சியளிக்கும். அந்த அளவிற்கு பளிச்சென சுத்தமாகி இருக்கும். டைல்ஸ்கள் மட்டுமல்லாமல் கழிப்பறையின் சுவர் பகுதிகளிலும் இந்தக் கரைசல் கொண்டு கழுவலாம். அதில் இருக்கும் உப்புக் கறையும் முற்றிலும் நீங்கி விடும்.
இரண்டு ரூபாய் சீவக்காய் பாக்கெட் மற்றும் ஒரு ரூபாய் ஷம்பூ மூலமாக நம் வீட்டில் இருக்கும் கழிப்பறையை இந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்க முடியும்.
நன்றி - Wingz of Women Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.