பலருடைய வீடுகளிலும் தோசை என்பது தினசரி உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த தோசை சுடுகிற தோசைக்கல்லின் ஓரத்தில் படிந்திருக்கும் பல வருட எண்ணெய் பிசுக்கை ஒரே நிமிடத்தில் நீக்குவதற்கு பயனுள்ள டிப்ஸை இங்கே தருகிறோம்.
வீட்டில் தோசை சுடுகிற தோசைக்கல்லை அடிக்கடி சுத்தம் செய்ய முடியாது. பாத்திரம் கழுவுவது போல, அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால் அந்த தோசைக்கல்லில் தோசை சுட்டால் நன்றாக தோசை வராது. அதனால், அப்படியே விடுவதால் தோசைக்கல்லின் ஓரத்தில் எண்ணெய் பிசுக்கு அப்படியே படிந்து விடும். எண்ணெய் பிசுக்கு, பல மாதங்கள், பல வருடங்கள் படிந்து அப்படியே இருக்கும்.
தோசைக்கல்லில் இப்படி படிந்திருக்கும் இந்த எண்ணெய் பிசுக்கை ஒரு நிமிடத்தில் அகற்றலாம். அதை எப்படி அகற்றலாம் என்பதை இங்கே பார்க்கலாம். அதற்கு, எண்ணெய் பிசுக்கு படிந்திருக்கும் தோசைக்கல்லை எடுத்து, ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதில் வையுங்கள். லேசாக சூடானதும், உங்கள் வீட்டில் காய் கறி நறுக்கிற கத்தியை எடுத்து, தோசைக்கல்லில் படிந்திருக்கிற எண்ணெய் பிசுக்கை சுரண்டினால் அடையாக உரிந்து வரும். அதை நீக்கிவிட்டு ஒரு துணியால் தோசைக் கல்லை நன்றாகத் துடையுங்கள். அவ்வளவுதான், தோசைக்கல் ஓர பல வருட எண்ணெய் பிசுக்கு, ஒரே நிமிடத்தில் போயே போச்சு.
அதே நேரத்தில், தோசைக் கல்லின் நடுப்பகுதியில் சுரண்டக் கூடாது. தோசைக் கல்லின் ஓரத்தில் படிந்திருக்கிற எண்ணெய் பிசுக்கை மட்டுமே சுரண்டி எடுக்க வேண்டும். இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.