ஆயுர்வேதம் – ஒரு உணவு வழிகாட்டி

கணினி முன் அமர்ந்து உணவு உட்கொள்ள கூடாது. பசி எடுக்கும் பொழுது சாப்பிட வேண்டும், உணவுக்கான நேரத்தை நம் உடல் தானாகவே பொருத்திக்கொள்ளும்

கணினி முன் அமர்ந்து உணவு உட்கொள்ள கூடாது. பசி எடுக்கும் பொழுது சாப்பிட வேண்டும், உணவுக்கான நேரத்தை நம் உடல் தானாகவே பொருத்திக்கொள்ளும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Uses of ayurveda : ஆயுர்வேதம் - ஒரு உணவு வழிகாட்டி

Uses of ayurveda : ஆயுர்வேதம் - ஒரு உணவு வழிகாட்டி

மக்கள் மத்தியில் ஆயுர்வேத மருந்துகள் அதிகமாக பயன்பாட்டை கொண்டுள்ளது. ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட சிறந்த வாழ்க்கையை ஆயுர்வேதம் தரும் என நம் முன்னோர்கள் நம்பினர். மேலும் இயற்கை உணவுகளை உண்டால் நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

Advertisment

ஆயுர்வேதத்தின் நன்மைகள் 

1. ஊட்டம் நிறைந்த உணவு

இயற்கையான உணவில் அதிக ஊட்டச்சத்து நிறைந்திருக்கும். சுத்திகரிக்கப்பட்ட மொத்த தானியங்கள், முழு பழங்கள் மற்றும் பருவகால காய்கறிகள் நிறைய உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை காக்கும். ஆனால்

Advertisment
Advertisements

பதப்படுத்திய உணவு உடல் நலத்தை தடுக்கும்.

2. சீரான உணவு

குப்பிகள் உணவை சம நிலையில் வைத்திருக்க, ஆயுர்வேத அறுசுவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவற்றை எல்லா உணவிலும் சேர்க்க வேண்டும்.

3. பழம் மற்றும் காய்கறிகள்

உங்கள் உணவை காய் பழங்களால் அலங்கரியுங்கள், ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்

4. மசாலாக்கள்

மசாலாக்கள் நம் உணவில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. இது சுவைக்காக மட்டுமின்றி உடல் நலத்திற்காகவும் தான். ஜீரண சக்தியை அதிகரித்து, சத்துகளை உடலில் எளிமையாக சேர்க்கும்.

5. சுத்தம் செய்யும்

உடலின் உள்ளேயும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஜீரணசக்தியை குறைக்கும் செயலை செய்யக்கூடாது. தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து உணவு உட்கொள்ள கூடாது. பசி எடுக்கும் பொழுது சாப்பிட வேண்டும், உணவுக்கான நேரத்தை நம் உடல் தானாகவே பொருத்திக்கொள்ளும். அந்த நேரத்தில் உணவை உண்ண வேண்டும். வேகமாக சாப்பிடாமல், பொறுமையாக அரைத்து சாப்பிட வேண்டும். இவை அனைத்தும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்

6. தண்ணீர்

நம் உடம்பை எப்பொழுதும் நீர் சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான நீரை எடுக்கவில்லை என்றால் சர்மம் பாழாகும். மிக குளிர்ந்த நீரை தவிர்த்த சாதாரண நீரை அருந்த வேண்டும், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

ஆயுர்வேதமானது நம் ஐந்து உணர்ச்சிகளோடு வளர்சிதை மாற்றத்தைக் கூறுகிறது. தொடுதல், பார்வை, சுவை மற்றும் வாசனையால் நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் நம்மில் ஒரு பகுதிதான்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: