/indian-express-tamil/media/media_files/2025/05/04/hzRdziikJD3llmJma6eS.jpg)
தலை முடியின் ஆரோக்கியத்தை ஆளி விதைகளை பயன்படுத்தி பராமரிக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். அந்த வகையில் இதன் நன்மைகள் மற்றும் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், ஆளி விதையை தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார். இதன் மூலம் மாரடைப்பு, புற்றுநோய், அல்சைமர், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
இது தவிர சருமத்தையும், முடியையும் பராமரிக்கவும் இதனை உபயோகிக்கலாம். அதனடிப்படையில், ஆளி விதையை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள் இருக்கிறது. இதற்காக மூன்று கிளாஸ் தண்ணீரில் 3 ஸ்பூன் ஆளி விதைகளை கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீர் சுமார் ஒரு கிளாஸ் அளவிற்கு குறைந்ததும், ஆறவைக்க வேண்டும். இது ஆறியதும் பார்ப்பதற்கு ஜெல்லி போன்று காட்சியளிக்கும். இதையடுத்து, ஜெல்லை மட்டும் தனியாக வடிகட்டி, தலை முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து சுடுதண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும், குறிப்பாக, இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஷாம்பூவை பயன்படுத்தாமல், சீவக்காய் போட்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்று மருத்துவர் மைதிலி குறிப்பிடுகிறார்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் தலை முடி அடர்த்தியாக வளரும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். மேலும், இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் கிடையாது.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.