Using this simple kitchen ingredient to get rid of rice bugs
தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை’ காற்று புகாத கன்டெய்னரில் குளிர்ந்த, உலர்ந்த இடங்களில் சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறது.
Advertisment
இருப்பினும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், அவற்றில் பூச்சிகள் ஊர்ந்து செல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம், இதனால், அவற்றைப் போக்க மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து அரிசியை கழுவ வேண்டியிருக்கும்.
ஆனால் உங்கள் அரிசி பூச்சியில்லாமல் இருப்பதை உறுதிசெய்ய சில எளிய வழிகள் உள்ளன. ஆனால், அதற்கான பதில் உங்கள் சமையலறை அலமாரியில் உள்ளது!
பிரியாணி இலை அல்லது வேப்பிலை
Advertisment
Advertisements
வண்டுகளைப் போக்க இது ஒரு சிறந்த மருந்து. அரிசியில் பூச்சி வரலாமல் இருக்க மாசுபடாமல் இருக்க, பிரியாணி இலை அல்லது வேப்ப இலைகளை கொள்கலன்களில் வைக்கலாம்.
கிராம்பு!
அவை எளிதில் கிடைக்கக்கூடியவை மற்றும் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக பூச்சிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உங்கள் அலமாரி பகுதியை சுத்தம் செய்யப் பயன்படும் கிருமிநாசினியில் சில கிராம்பு எண்ணெயையும் சேர்க்கலாம்.
பிரிட்ஜில் சேமிக்கலாம்!
அரிசியை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் பிரிட்ஜில் சேமிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த செயல்முறை அனைத்து அந்துப்பூச்சிகளும் கொல்லப்படுவதை உறுதி செய்யும். நீங்கள் அவற்றை அறை வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் சேமிக்கலாம்.
பூண்டு
உரிக்கப்படாத பூண்டு பற்களை அரிசி பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். பூண்டு காய்ந்தவுடன் மீண்டும் அவற்றை மாற்றவும்.
சூரிய ஒளி
அரிசி அதிகளவு வண்டுகளால் தாக்கப்பட்டிருந்தால், அதை சூரிய ஒளியில் வைக்கவும். பூச்சிகள் இருண்ட மற்றும் ஈரமான இடங்களில் ஊர்ந்து செல்லும், அதேநேரம், அவை சூரிய ஒளியை விரும்புவதில்லை. இதை ஒரு வழக்கமான சுகாதார பயிற்சியாக ஆக்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “