/indian-express-tamil/media/media_files/2025/09/15/download-19-2025-09-15-09-22-02.jpg)
இன்றைய காலக்கட்டத்தில், அதிகமானோர் காலையில் விழித்தவுடன் முதலில் செய்யும் விஷயம் — கைபேசியை எடுத்து டாய்லெட்டுக்குள் கொண்டு செல்வதுதான். அந்த சிறிய நேரத்தையும் வீணாக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பலர் டாய்லெட்டில் அமர்ந்தபடியே மொபைல் போன் பார்க்க தொடங்கி விடுகிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது.
பொதுவாக, டாய்லெட்டில் அதிக நேரம் கழிப்பது உடலுக்கு நல்லதல்ல. அதிலும் கைபேசி பயன்படுத்துவதால் நாம் அந்த இடத்தில் அதிக நேரம் அமர்ந்து விடுகிறோம். இதனால் பைல் (மூலவியாதி), குத பாகம் வலி, தசை பிடிப்பு, மற்றும் இரத்த ஓட்ட பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதோடு, டாய்லெட்டில் உள்ள நோய் கிருமிகள் கைபேசியின் மேல் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். அதைத் தொடர்ந்து நாம் கைபேசியை தினமும் முகத்திற்கும், கைகளுக்கும் நெருக்கமாக பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உருவாகிறது.
எனவே, டாய்லெட்டில் கைபேசி பயன்படுத்தும் பழக்கம் ஒரு சாதாரண விஷயம் என்று நினைக்காமல், அதன் உடல் நலப் பாதிப்புகளை உணர்ந்து, அந்த நேரத்தை சுத்தமான, ஆரோக்கியமான முறையில் செலவிடுவது மிகவும் முக்கியம்.
மொபைல் அதிகம் பயன்படுத்தினால் நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் போன் பார்த்துக் கொண்டிருப்பதால் வழக்கத்தை விட நீண்ட நேரம் அங்கே அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இதை பலரும் ரிலாக்ஸாக இருக்கிற நேரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் அதிகமாக அதிகமாக என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பாக்டீரியா தொற்றுக்கள்
கழிவறையில் அதிகமான கிருமிகள் உள்ளதால், அங்கு செல்போன் பயன்படுத்தினால் அவை ஸ்கிரீனில் ஒட்டிக்கொள்ளும். கைகளை சுத்தம் செய்தாலும், போனில் இருக்கும் கிருமிகள் நாளையும் முழுவதும் உடலுக்கு ஆபத்தாக இருக்க முடியும்.
எவ்வளவு நேரம் நீடிக்கும்?
செல்போனில் கழிவறையில் இருந்து பரவும் கிருமிகள் தொற்றியிருக்கும். கிருமியின் தாக்கத்தைப் பொருத்து கிட்டதட்ட இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையிலும் கூட இந்த கிருமிகள் செல்போனில் படிந்திருக்க வாய்ப்புண்டு. அதோடு தொடர்ச்சியாக நாள் முழுக்க செல்போன் பயன்படுத்துவது மற்றும் சார்ஜ் போன்றவற்றால் போன் ஸ்க்ரீன் வெப்பமடையும். அது கிருமிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மூலநோய்
வெளியுலகத் தொடர்பே இல்லாமல், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டிய அறைதான் கழிவறை என்று நினைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு வருபவர்களும் நிறைய உண்டு. அப்படி மணிக்கணக்கில் இடுப்புக்கும் காலுக்கும் அதக அழுத்தம் கொடுத்து, குறுக்கி அமர்ந்திருப்பதும், கழிவறையில் இருந்து வரும் ரசாயன வெப்பமும் மூல நோய் பிரச்சினையை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல்
கழிவறையில் அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்போது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இப்படி அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதுவே கூட நிம்மதியாக மலம் கழிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
இடுப்பு வலி
தொடர்ச்சியாக கழிவறைக்குள் செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாானோர் இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். காரணம், நம்முடைய இடுப்பு உயரத்துக்கும் தரைக்கும் இடைபட்ட உயரத்தில் கழிவறை இருக்கை இருக்கும். இந்த பொசிஷனில் அதிக நேரம் அழுத்தத்துடன் அமர்ந்திருக்கும்போது இடுப்பு வலி உண்டாகும்.
தீர்வு தான் என்ன?
கழிவறையில் செல்போன் உள்ளிட்ட விசயங்களில் கவனம் திசைதிருப்பாமல், திட்டமிட்டு வேலையை முடித்துச் செல்ல வேண்டும். இது உடல்நலத்துக்கும் ஒழுக்கத்துக்கும் நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.