/indian-express-tamil/media/media_files/2025/03/13/uvkcMebQJO2TO6yUhMEo.jpg)
பயணிகளின் வசதிக்காக மதுரை - சென்னை - மதுரை வைகை மற்றும் காரைக்குடி - சென்னை - காரைக்குடி பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது.
பயணிகளின் வசதிக்காக மதுரை - சென்னை - மதுரை வைகை மற்றும் காரைக்குடி - சென்னை - காரைக்குடி பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது. மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவற்றில் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
அதேபோல காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவற்றில் மே 12 முதல் ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். இதற்காக இந்த ரயில்களில் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த ரயில்கள் 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 12 முன்பதிவுள்ள இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.