தமிழ் மாதம் வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் வைகாசி விசாகம் முருகப் பெருமானின் பிறந்தநாளாகும். இந்த நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்படும்.
அந்த வகையில், இந்தாண்டு வைகாசி விசாகம் மே 22-ம் தேதி புதன்கிழமை வருகிறது. மே 22-ம் காலை 8.18 மணிக்கு தொடங்கி, மே 23-ம் தேதி காலை 9.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22-ம் தேதி நாள் முழுவதும் இருக்கலாம். விசாகம் நட்சத்திரம் அந்த நாள் முழுவதும் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை நீங்கி, துன்பம் நீங்கும் என்பது ஐதீகம். அதோடு குழந்தை வரம் வேண்டுபவர்களும் அன்றைய தினம் வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்றும் நம்பிக்கை உண்டு. அன்றைய தினத்தில் விரதம் இருப்பவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அப்போது கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் உள்பட முருகன் பாடல்களைப் படித்து வழிபடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“