Advertisment

வைக்கோவின் கார் ஓட்டுநர் நெல்லையில் திடீர் மரணம்

நெல்லை அருகே வைக்கோவின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
updates

கார் ஓட்டுநர்

நெல்லை அருகே வைக்கோவின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த்வர் சின்னத்துரை. இவர் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று நெல்லை அருகே உள்ள இட்டேரி பகுதியில் உள்ள தோட்டத்து  பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது நீச்சல் குளத்திற்கு அருகே சின்னதுரை திடீரென மயங்கி விழுந்தார்.

இவரது நண்பர்கள் இவரை உடனடியாக நெல்லையில் உள்ள ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இவர் வழியில் வரும்போதே மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து  முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவரது மறைவையொட்டி  ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜெந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வைகோ இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment