/indian-express-tamil/media/media_files/2025/01/11/ONyTxk2TbTyHGjpeRjRE.jpg)
வைகுண்ட ஏகாதசி
கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி ஒட்டி இன்று அதிகாலை 5 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் பூஜை செய்யப்பட்ட மலர் மாலை பெருமாளுக்கு சாட்டப்பட்டது.
கோயில் தலைமை குழுக்கள் சீனிவாசா ஐயங்கார் அறங்காவலர் குழு நிர்வாகி ராஜா ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பக்தர்கள் சூழ வலம் வந்து வரதராஜ பெருமாளுக்கு செலுத்தப்பட்டது.
அதன் பின் நடை திறக்கப்பட்டு சொர்க்கவாசல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பி சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தனர்.
அதன்பின் உற்சாகம் திருவீதி உலா கோவை நகரில் முக்கிய பகுதிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.
பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us