/indian-express-tamil/media/media_files/2025/08/20/vanitha-vijayakumar-peter-paul-2025-08-20-12-41-03.jpg)
Vanitha Vijayakumar
2020-ஆம் ஆண்டில் பீட்டர் பாலுடன் வனிதாவுக்கு திருமணம் ஆனதிலிருந்து நிறைய பிரச்சனைகள் தொடர்ந்தன. பல சர்ச்சைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்தாலும், பீட்டர் பாலின் மறைவு குறித்து வனிதா முதன்முறையாகப் பேசியுள்ளார். கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர் தங்கள் உறவு, பீட்டர் பாலின் இறப்பு, அவர் தனிமையில் இருந்தது மற்றும் பிற விஷயங்களைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.
"அவர் ஒரு நல்ல மனிதர், ஒரு நல்ல ஆத்மா. இது எப்போதும் நடக்கும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தை நம்புகிறேன். நம் வாழ்க்கையில் யார் வருகிறார்களோ, அதுக்கு ஒரு காரணம் இருக்கு. யார் நம் வாழ்க்கையிலிருந்து விலகுகிறார்களோ, அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நடக்குது. அது என்ன காரணம்னு நாம் ஆராய்ஞ்சு பார்த்தா, அப்புறம் வாழ்க்கையே இல்லை.
அந்த வகையில், ஒரு தனிப்பட்ட நபராக அவர் எனக்கு நிறைய விஷயங்கள் செய்திருக்கார். இன்று வரை எனக்கு மறக்க முடியாத சில விஷயங்கள் இருக்கு. அது ஒரு குறுகிய காலம்தான், என் வாழ்க்கையில ஒரு ஷார்ட் டைம். ஆனா அந்த ஷார்ட் டைம்ல அவர் நிறைய விஷயங்கள் செய்திருக்கார்.
என்னோட சேனலை சேனலை பில்ட் பண்ணது, அந்த லோகோ ஆரம்பிச்சு, இன்னைக்கு 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் அந்த சேனலுக்கு இருக்காங்க. அந்த சிச்சுவேஷன்லதான் நாங்க கனெக்ட் ஆனோம். பீட்டர் பால் இல்லைன்னா கண்டிப்பா இவ்வளவு தூரம் நான் நிறைய விஷயங்கள் பண்ணிருக்க முடியாது. அந்த நல்ல நினைவுகளை நான் இன்னும் நினைச்சுட்டுதான் இருக்கேன். அவருக்கு டெஸ்டினி அப்படி இருந்தது, அது ஒரு சோகமான விஷயம்.
அவர் தனியாதான் இருந்திருக்கார், அவரது அம்மாவோடதான் இருந்திருக்கார். அவர் எப்போதுமே தனியாதான் இருந்திருக்கார்.
பழைய தமிழ் சீரியல், படமெல்லாம் பார்த்திருப்பீங்க. ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை செட் பண்ணி, 'வைஃப்'ங்கிற கேரக்டரை அனுப்புவாங்க. அந்த கேரக்டர் எங்க இருப்பாங்கன்னே தெரியாது, திடீர்னு வந்து ஒரு நாடகம் ஆடுவாங்க. ஒரு பிரச்சனையை கிரியேட் பண்றதுக்காக அப்படி அனுப்புவாங்க. அதே மாதிரிதான் அவருடைய லைஃப்பிலும் 8 வருடம் கழிச்சு வந்தாங்க.
சரி, இந்த பிரச்சனையில இருந்து விலகி போகணும்னு நான் நினைச்சேன். அவருக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுத்தேன். 'எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கையில் இருக்க முடியாது'ன்னு தெளிவா சொன்னேன்.
நான் அவரைச் சந்திக்கும்போது எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல் தான் இருந்தார். இந்த டென்ஷன், இந்தப் பிரச்சனை எல்லாமே அவரை ரொம்ப டிப்ரெஷனாக்கிடுச்சு. அதனால பழைய பழக்கங்களுக்கு அவர் திரும்பிப் போயிட்டார். என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியல. நான் அவரிடமிருந்து விலகிவிட்டேன். அந்த டைம்ல அவரோட குடும்பத்தில் இருந்து யாரும் வரலை, பார்க்கவும் இல்லை.
அவர் இறந்த செய்தி வந்ததும், நாம போய் நிற்கும்போது நமக்கு எதிராகத்தான் எல்லாம் மாறும். அதனால, நான் மனசுக்குள்ள அமைதியா கடவுளை வேண்டிக்கிட்டேன். அவரை இன்னும் நான் ஒவ்வொரு நாளும் நினைச்சு பார்க்கிறேன். ஒவ்வொரு விதத்துல அவரை நினைக்கிறேன். ஏன்னா, அவர் தந்த சின்ன சின்ன நினைவுகள் நிறைய இருக்கு", என்று வனிதா எமோஷனலாக அந்த பேட்டியில் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.