vanitha vijayakumar son vanitha son vijay srihari : பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய பேரின் வாழ்க்கை மாறியது. அதில் சீசன் 3 போட்டியாளர் வனிதா விஜயகுமார் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.
மிகப் பெரிய சினிமா பின்னணி கொண்டவர் என்றாலும் வனிதா மீத ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கிறது.குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது. ஆனால் அந்த அனைத்தையும் பிக் பாஸ் 100 நாட்களில் மாற்றியது.
வனிதாவால் தான் பிக் பாஸ் டி.ஆர்.பி எகிறியது. இதனால் வனிதாவை தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவரை கலந்துகொள்ள வைத்தது.மற்ற இரண்டு சீசன்கள் முடிவடைந்த உடனே அதுக் குறித்த தாக்கம் பார்வையாளர்களிடம் இருந்து 2 நாட்களில் விலகி விட்டது. ஆனால் இந்த சீசன் அப்படி இல்லை தொடர்ந்து மக்கள் பிக் பாஸ் பற்றியே அதிகம் பேசினர். இதனை பயன்படுத்திக் கொண்ட வனிதா, யூடியூபில் சமையல் நிகழ்ச்சியை தொடங்கினார். கூடவே வனிதா தற்போது விமர்சகராகவும் அவதாரமெடுத்தார்.
வனிதாவை, விஜயக்குமார் குடும்பத்தினர் யாரும் கண்டுக்கொள்ளவது இல்லை. தனியாகவே தனது மகள்களுக்காக வனிதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கலக்கி வருகிறார். அவரின் சமையல், மேக் டிப்ஸ் அனைத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
இந்த நேரத்தில் தான் பீட்டர் பால் உடன் வனிதாவின் திருமணம் அரங்கேறியது. அதுவும் இப்போது சர்ச்சையில் முடிந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆகாஷ், சமுத்திரம், தாமிரபரணி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் விஜய் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னுடன் அனுப்புமாறு வழக்கு தொடர்ந்தார் வனிதா. ஆனால் வனிதாவின் குடும்பத்தினர் ஆகாஷ்க்கு ஆதரவாகவே நின்றனர்.மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் கண்காணிப்பில் வளர்ந்தார். இதனால் குடும்பத்தினருடன் பெரும் தகராறில் ஈடுபட்டார் வனிதா. மகனை தன்னுடன் அனுப்ப வனிதா, விஜயகுமார் போட்ட சண்டை வீடியோ பார்ப்பவர்களையும் முகம் சுளிக்க வைத்தது.
அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ராஜன் ஆனந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.
இப்போதும் வனிதாவின் மகன் விஜயகுமார் மற்றும் தந்தை கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார். ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்து விட்டார். அதுமட்டுமில்லை மாமா அருண் விஜய்யும் ஸ்ரீஹரிக்கு செம்ம ஃபிட்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.