இது வாழைப்பூவில் செய்த கூட்டானு ஷாக் ஆயிடுவாங்க… இந்த ருசிக்கு… கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

வாழைப்பூவில் இப்படி கூட்டு செய்தால், போதும் எல்லாரும் அதிகமாக சாப்பிடுவார்கள். நீங்க கண்டிப்பாக செய்து பார்க்கணும்.

வாழைப்பூவில் இப்படி கூட்டு செய்தால், போதும் எல்லாரும் அதிகமாக சாப்பிடுவார்கள். நீங்க கண்டிப்பாக செய்து பார்க்கணும்.

author-image
WebDesk
New Update
vapo

வாழைப்பூவில் இப்படி கூட்டு செய்தால், போதும் எல்லாரும் அதிகமாக சாப்பிடுவார்கள். நீங்க கண்டிப்பாக செய்து பார்க்கணும்.

Advertisment

 தேவையான பொருட்கள் 

100 கிராம் பாசி பருப்பு

முகால் கப் தண்ணீர்

Advertisment
Advertisements

5 சிட்டிகை மஞ்சள் தூள்

2 ½ ஸ்பூன் எண்ணெய்

அரை ஸ்பூன் கடுகு

அரை ஸ்பூன் சீரகம்

3 காய்ந்த மிளகாய்

அரை ஸ்பூன் பெருங்காயம்

2 பச்சை மிளகாய்

4 பல் பூண்டு

கொஞ்சம் இஞ்சி

கொஞ்சம் கருவேப்பிலை

1 வெங்காயம் பொடியாக நறுக்கியது

1 தக்காளி நறுக்கியது

1 வாழைப்பூ

கால் ஸ்பூன் மிளகாய் தூள்

கால் ஸ்பூன் மல்லித் தூள்

தேவையான அளவு உப்பு

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை: வாழைப்பூவை நன்றாக கழுவி, நறுக்கி மோரில் சேர்க்கவும். இதை தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். ஒரு குக்கரில் பாசி பருப்பு, தண்ணீர் , மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், அதில் மோரில் சேர்த்த வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். இதையும் நன்றாக வதக்க வேண்டும். தற்போது வேக வைத்த பருப்பை, இதில் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து உப்பை சேர்த்துகொள்ள வேண்டும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: