/indian-express-tamil/media/media_files/2025/08/16/kushboo-saree-2025-08-16-19-23-57.jpg)
Kushboo
புடவை... வெறும் ஆடை அல்ல, அது ஒரு கலை! பாரம்பரியமும் நவீனமும் இணையும் ஒரு பட்டு இழை. அப்படி எப்போதும் புதுமையாக புடவை அணிந்து, பல பெண்களின் ஃபேஷன் ஐகானாகத் திகழும் குஷ்பூ, சமீபத்தில் அணிந்த ஒரு பட்டுப்புடவை பலரது கண்களையும் பறித்துவிட்டது. அந்தப் புடவையின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான கதையை அவரே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"இந்த புடவை ஆந்திரப் பிரதேசத்துல இருக்க ஹேண்ட்லூம் நெசவாளர்கிட்ட இருந்து வாங்குனது. இப்போ புடவை கடைகள்ல கிடைக்கிற வெங்கட்கிரி சில்க், வெங்கட்கிரி காட்டன்ஸ்லாம் சாதாரணமானது. ஆனால் இந்த புடவை 50 வருஷங்களுக்கு முன்னாடி இருந்து நெய்யுற ஒரு பிராப்பரான வெங்கட்கிரி சில்க் ரகம். இத நான் நெசவாளர்கிட்ட இருந்து நேரடியாக வாங்குனேன்.
புடவையோடவே பிளவுஸ் மெட்டீரியல் கிடைச்சுது. சென்னையில யூ.டி.(UT)னு ஒரு பூட்டிக் இருக்குது. அவர்களிடம் இந்த புடவையையும், பிளவுஸ் மெட்டீரியலையும் கொடுத்து, கல்யாணத்துக்கு போடுற மாதிரி சிம்பிளாக தைச்சு தரச் சொன்னேன். அவங்க என்னுடைய ரசனைக்கு ஏற்ற மாதிரியே அழகாக பிளவுஸை டிசைன் பண்ணி கொடுத்தாங்க”, என்றார் குஷ்பூ.
இந்த அழகிய புடவை குஷ்பூவின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. பாரம்பரியமான புடவையைத் தேர்வு செய்து, அதற்கு நவீனமான ஆனால் எளிமையான பிளவுஸை இணைத்து, எப்படி ஒரு பெண்ணுக்குப் புத்தம் புதிய தோற்றத்தைக் கொடுக்கலாம் என்பதற்கு குஷ்பூவின் இந்தப் புடவைத் தேர்வு ஒரு சிறந்த உதாரணம். அவரது இந்த ஸ்டைல், பல பெண்களுக்கும் நிச்சயம் உத்வேகம் அளிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.