இது நம்ம வெங்கடேஷ் பட் சார் கண்டுபிடிச்ச ரெசிபி. ரொம்ப ஈசியா செய்யவும் முடியும்.
தேவையான பொருட்கள்
பால் - 2 கப் (தண்ணீர் சேர்க்காதது - 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்தது)
கண்டன்ஸ்ட் பால் - 1/4 கப் (விரும்பினால்)
சர்க்கரை - 3 டீஸ்பூன்
தேங்காய் - 2 (இளம் தேங்காய் - வழுக்கை தேங்காய்)
தேங்காய் துருவல் - 2 கப்
இள நீர் - 1/4 கப்
ஏலக்காய் - 4-5
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரி 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் பால் ஊற்றி 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பிறகு அவற்றை மிதமான சூட்டியில் வைத்து அதில் கண்டன்ஸ்ட் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து கீழே இறக்கி வைக்கவும்.இப்போது இளநீர் பாயசம் செய்ய 2 இளம் தேங்காய் அல்லது வழுக்கை தேங்காய் முக்கியம் ஆகும். ஒரு தேங்காயை சிறிதளவு இளநீர் ஊற்றி மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். மற்றொரு தேங்காயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் பாயசம் தயார் செய்ய தேவையான தேங்காய் பாலிற்கு, 2 கப் தேங்காய் துருவலோடு 4 அல்லது 5 ஏலக்காய் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு துணியில் இட்டு பாலை தனியாக எடுத்துக்கொள்ளவும்.பின்னர், தனியா ஒரு சிறிய பாத்திரம் அல்லது பேன் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் நொறுக்கி 10 முந்திரி பருப்புகளை இட்டு கிளறவும்.
இப்போது, ஒரு பவுள் எடுத்து முதலில் அரைத்து வைத்துள்ள இளம் தேங்காயை சேர்க்கவும். அவற்றோடு பொடியாக நறுக்கி வைத்துள்ள இளம் தேங்காயையும் சேர்க்கவும். தொடர்ந்து காய்ச்சி வைத்த பால் மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும். இறுதியாக நெய் விட்டு கிளறிய முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பரிமாறவும்.இந்த சுவை மிகுந்த இளநீர் பாயசத்தை உடனடியாகவும் பரிமாறி ருசிக்கலாம் அல்லது குளிர்சாதன பெட்டியில் இட்டு மறுநாள் ருசித்து மகிழலாம்.