vijay tv anchor kalyani : பிரபு தேவா நடித்த 'அள்ளித்தந்த வானம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. இவரின் ஹார் ஸ்டைல் தான் இவரின் பிளஸ். அந்த படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பாராட்டிய தமிழ் இயக்குனர்கள் அடுத்தடுத்து ஜெயம், ரமணா படங்களில் வாய்ப்பை அளித்தனர்.
Advertisment
பெரிய திரையில் நல்ல பெயரை சம்பாதித்து விட்டு சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய கல்யாணி விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற தொடர்களின் லீட் ரோலில் கலக்கினார். இடையில் ஆங்கரிங் பணியையும் விட்டு வைக்கவில்லை.விஜய் டிவி, , ஜீ தமிழ் இரண்டிலும் கல்யாணி செம்ம பிஸி.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த வளர்ந்த கல்யாணியின் நிஜப்பெயர் பூர்ணிதா. கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த என்ற மருத்துவரை மணந்து அங்கேயே செட்டிலாகிவிட்டார் கல்யாணி. திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வந்த கல்யாணி, கடந்த ஆண்டு சின்னத்திரையில் இருந்தும் விலகினார்.கடந்த வருடம் இவர்களுக்கு நவ்யா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.
கல்யாணி கர்ப்பமாக இருந்ததால் தொகுப்பாளினி பணியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவலை தனது வளைக்காப்பு புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தினார் கல்யாணி.
இந்நிலையில், இவர்களின் செல்ல மகளான நவ்யாவ்பின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை கல்யாணி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
முதன்முறையாக பல வருடங்கள் கழித்து கல்யாணியின் புகைப்படம் மற்றும் அவரின் குழந்தையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மற்றும் லைம்ஸ்களை குவித்து வருகின்றன.