/indian-express-tamil/media/media_files/2025/04/27/GVXOqxPrbVs9lB1uBzMO.jpg)
தமிழக வெற்றி கழகம் பூத் கமிட்டி கருத்தரங்க நடைபெறும் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை கட்சி நிர்வாகிகள் அகற்றினர்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் 5 மண்டலங்களில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி தமிழக வெற்றி கழக பூத் கமிட்டி முதல் கருத்தரங்கம் கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று (ஏப்ரல் 26) இன்றும் (ஏப்ரல் 27) இரு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த பூத் கமிட்டி கருத்தரங்கில் கட்சியின் தலைவரும் நடிகரமான விஜய் பங்கேற்று, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வெளியே உள்ள வளாகத்தில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை போட்டு விட்டு சென்றனர்.
இதனையடுத்து அந்த குப்பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் இன்று அகற்றி சுத்தம் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.