Vijayadashami 2025: உங்க குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்க உகந்த நேரம்... தேச மங்கையர்க்கரசி விளக்கம்

விஜயதசமி பூஜைக்கான சுப முஹூர்த்தம் : குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்க உகந்த நேரம் எது என்பது குறித்து தேச மங்கையர்க்கரசி விளக்கம் அளித்துள்ளார்.

விஜயதசமி பூஜைக்கான சுப முஹூர்த்தம் : குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்க உகந்த நேரம் எது என்பது குறித்து தேச மங்கையர்க்கரசி விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vidhyarambam

விஜய தசமி 2025: உங்க குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்க உகந்த நேரம்... தேச மங்கையர்க்கரசி விளக்கம்

விஜயதசமி பூஜை 2025 கொண்டாட்டம்: நவராத்திரியின் முக்கிய தெய்வம் துர்க்கை. பெண் சக்தியை துணையாக கொண்டு நடந்த வதத்தின், இறுதிநாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடவும் விஜய தசமி ஏற்ற நாளாகும். 

Advertisment

விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. நவராத்திரியில், முப்பெருந்தேவியரின் பூஜை முடிந்த பின் வரும் 10-வது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்தவொரு செயலும் சிறந்த வெற்றி தரும் என்பது நம்பிக்கை. 

அந்த தினத்தில், குழந்தைகள் கற்றுக் கொள்ள துவங்கும் கலையில், அவர்கள் ஒன்றிவிடுவர். இதனால், விஜயதசமியன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. கல்வி கற்றுத்தரும் குருவின் பங்கு, இதில் மிக முக்கியம். அறிவை கற்றுத்தரும் குருவை சிறப்பிப்பதாகவும், இந்நிகழ்வு நடக்கிறது. 

இந்நிலையில், குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய உகந்த நேரம் எது என்பது குறித்து தேச மங்கையர்க்கரசி விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “சரஸ்வதி பூஜை என்பது யார் எதுனால் பயனடைகிறார்களோ அதை வைத்து பூஜிப்பது ஆகும். 

Advertisment
Advertisements

சரஸ்வதி பூஜை வழிபாடு நடத்துபவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 9:10 மணி முதல் 10:20 மணி வரை வழிபாடு செய்யலாம். பின்னர், 10:40 மணியில் இருந்து 11:50 மணி வரை வழிபாடு செய்யலாம். மாலை நேரத்தில் வழிபாடு செய்பவர்கள் 4:30 மணியிலிருந்து 5:30 மணி வரை வழிபாடு செய்யலாம்.

 மாலை 06:00 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலு வழிபாடு செய்யலாம். வரும் 2-ஆம் தேதி விஜய தசமி அன்று  காலை 7:45 மணி முதல் 8:50 மணி வரை வழிபாடு செய்யலாம். அதன்பின்னர் 10:40 மணியிலிருந்து 12:00 மணி வரை வழிபாடு செய்யலாம். 

அன்று தசமி மதியம் 03:40 மணி வரை தான் இருக்கும் என்பதால் விஜய தசமி வழிபாடு செய்பவர்கள் காலை நேரத்தில் செய்தல் உகந்தது. மாலை 06:00 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம்.வித்யாரம்பம் செய்யக் கூடிய பிள்ளைகளுக்கு மேல் குறிப்பிட்ட நேரங்களில் வித்யாரம்பம் செய்யலாம்.

 பள்ளி அல்லது கோயில்களில் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் வீட்டின் உள்ள வயதானவர்கள் மூலம் செய்து கொள்ளலாம். யாரும் இல்லாதபட்சத்தில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கலாம்” என்றார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: