எனக்கு ஆறுதல் சொல்ல 500 கார்ல விஜயகாந்த் வந்தார்: நடிகர் தியாகு எமோஷ்னல்

. படப்பிடிப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு, தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வது என அவரின் நல்லியல்புகள் பல.

. படப்பிடிப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு, தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வது என அவரின் நல்லியல்புகள் பல.

author-image
WebDesk
New Update
Caption Vijayakanth

Caption Vijayakanth

திரையுலகில் ஒரு நடிகராக அறிமுகமாகி, அசைக்க முடியாத ஆளுமையாக வளர்ந்து, பின்னர் அரசியலிலும் ஒரு அத்தியாயத்தை உருவாக்கியவர் 'புரட்சிக் கலைஞர்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த்! தமிழ் சினிமாவின் பொற்காலங்களில், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலத்தில், தனி ஒரு அலை அலையாய் எழுந்து, மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டவர்.

Advertisment

விஜயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், மதுரை மண்ணில் பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது ஏற்பட்ட காதல், படிப்பில் நாட்டத்தை குறைத்தது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த அவர், அவரின் படங்களை பார்த்து, அதில் வரும் காட்சிகளை தன் நண்பர்களிடம் விவரித்து மகிழ்வார். சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது, பல புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் சந்தித்தார். ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடாமல், "இனிக்கும் இளமை" என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். ஆனால், அவருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படம். அதன் பிறகு, அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.

vijayakanth

1980கள் மற்றும் 1990களில் விஜயகாந்தின் காலம் என்றே சொல்லலாம். ஆக்‌ஷன் படங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம், அவரை ரசிகர்களின் "கேப்டன்" ஆக மாற்றியது. "கேப்டன் பிரபாகரன்" திரைப்படம் அவருக்கு "கேப்டன்" என்ற அடைமொழியை பெற்றுத் தந்தது. ஒரே ஆண்டில் 18 படங்கள் வரை நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

Advertisment
Advertisements

விஜயகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பதைத் தாண்டி, ஒரு நல்ல மனிதர் என்றும் அறியப்படுகிறார். படப்பிடிப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு, தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வது என அவரின் நல்லியல்புகள் பல. நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, கடனில் மூழ்கியிருந்த சங்கத்தை தன் சொந்த முயற்சியால் மீட்டெடுத்தார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, சங்கத்தின் கடன்களை அடைத்து, குறைந்த ஊதியம் பெறும் கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தையும் கொண்டு வந்தார். இந்த ஈகைக் குணம் தான் அவரை மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெறச் செய்தது.

மக்கள் மனதில் மட்டும் இல்லை. சக கலைஞர்கள் மத்தியிலும் தான். அப்படி ஒரு சம்பவத்தை பற்றி கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் நடிகர் தியாகு பகிர்ந்து கொண்டார். 

அந்த வீடியோ

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: