விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகம் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை மாயன் பற்றிய கதை சென்றிருந்த நிலையில் தற்போது மாறன் என்ற அவரது ட்வின் சகோதரரும் வந்திருப்பதால் தற்போது டபுள் ஹீரோ கதையாக மாறி இருக்கிறது. இந்த ஹிட்டான தொடரில் ரட்சிதாவின் அம்மாவாக நடித்து வருகிறார் தீபா நேத்ரன். கேரளாவை சேர்ந்தவர். தனது 17 வயதில் 1997ல் நிலவில் களங்கமில்லை என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் நடிகர் நேத்ரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். சின்னத்திரையில் இவரது முதல் அறிமுகம் 2007ஆம் ஆண்டு ஜெயாடிவியில் ஒளிபரப்பான அலைபாயுதே சீரியல்தான். அதன்பிறகு ராஜ்டிவியில் ஹலோ சியாமளா தொடரில் நடித்தார். விஜய்டிவியின் கனா காணும் காலங்கள் தொடரிலும் நடித்துள்ளார். அதன்பிறகு சுமங்கலி தொடரில் நடித்து பிரபலமானார். தமிழில் சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு ஹைலைட்டாக அமைந்தது. இந்த சீரியலில் கவினின் அம்மாவாக நடித்திருப்பார். இந்த தொடருக்கு பிறகுதான் தீபாநேத்ரனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
அதன் பின்னர் ஜீ தமிழின் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்து திருப்புமுனையாக அமைந்தது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்தான். முதல் பாகத்தில் தேவியின் அம்மாவாக, மாயனின் மாமியாராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தேவிக்கு பாசமான அம்மாவாக மாயனுக்கு கொஞ்சம் வில்லியான மாமியாராக கலக்கியிருந்தார். இந்த தொடர் நல்ல ரீச் ஆனது.
தொடர்ந்து ஜீ தமிழின் நாச்சியார்புரம் சீரியலில் ரட்சிதாவின் அம்மாவாக நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2விலும் ரட்சிதாவின் அம்மாவாக நடித்து வருகிறார். தனது இளம் வயதிலேயே அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார். தீபா தனது கணவர் நேத்ரனை போலவே நல்ல டான்ஸரும் கூட. ஸ்டார் கிட்சன், நம்ம வீட்டு மகாலட்சுமி, ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார். ஜீ தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வாங்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் தீபா. தனது மகள்களான அபி மற்றும் அஞ்சனா உடன் போட்டோ ஷூட் நடத்தி அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தீபா நேத்ரன் எப்பவும் எல்லா சீரியல்களிலும், படங்களிலும் பாசிட்டிவ் கேரக்டரில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதை விரும்ப மாட்டாராம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil