விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்2. முன்னணி டிஆர்பியில் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் புது வரவாக பிரேமி வெங்கட் அறிமுகமாகி உள்ளார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசனில் பிரேமி வெங்கட் நடித்திருந்தார். அதில் அரவிந்த்தின் மாமியாராக பார்வதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சிறு வயதிலேயே நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளியில் படிக்கும்போது ஏராளமான ஸ்டேஜ் ப்ரொகிராமில் கலந்துகொண்டுள்ளார். கல்லூரி படிப்பை முடித்து முதன் முதலில் ஆசிரியாராக பணியாற்றி வந்தவர். பல்வேறு விளம்பரங்கள், ஷார்ட் பிலிம்ஸ்களில் நடித்துள்ளார்.
பிறகு சன்டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். கிட்டதட்ட 8 வருடங்கள் பணியாற்றிய இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் வாணி ராணி சீரியலில் அறிமுகமானார். அதன்பிறகு சந்திரலேகா சீரியலில் சந்திராவின் மாமியாராக அறிமுகமானார். இரண்டு தொடருமே படு ஹிட் ஆன சீரியல் என்பதால் ரொம்பவே ரீச் ஆனார். அதிலும் சந்திராவின் மாமியார் கேரக்டருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். அடுத்ததாக கங்கா சீரியல். இதில் பாசிட்டிவ் கேரக்டர். பாசமான வில்லேஜ் மதர்.
மறுபுறம் கண்மணியில் பயங்கரமான வில்லி கேரக்டர். சன்டிவியின் கண்மணி சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கிருஷ்ணவேனி என்ற கேரக்டரில் ஹரிப்பிரியாவின் அம்மாவாக நடித்திருப்பார். இந்த தொடரில் நடித்ததற்காக சன் குடும்பம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லிக்கான விருது வென்றார். தொடர்ந்து ஜீ தமிழின் நாச்சியார்புரம் சீரியலில் ரட்சிதாவுடன் நடித்தார்.விஜய்டிவியின் அவளும் நானும், காற்றின் மொழி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
கலர்ஸ் தமிழின் ஓவியா சீரியலில் டீசன்டான வில்லியாக நடித்தார். விதவிதமான கேரக்டரில் வெரைட்டியான நடிப்பில் அசத்தும் பிரேமி வெங்கட் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படித்தில் கேரக்டர் ரோலில் நடித்துள்ளார். பிறகு கார்த்தியின் மிஸ்டர் சந்திமௌலி படத்திலும் நடித்திருந்தார். தற்போது சன்டிவியின் சுந்தரி சீரியல் அனுவின் அம்மாவாக நடித்து வருகிறார். நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
சிறு வயதில் டிவியில் செய்தி வாசிப்பவர்களை பார்த்து தானும் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு அப்படியே வாசித்து பார்ப்பாராம். பிரேமிக்கு அம்மன் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.பெரும்பாலும் இவர் நடிக்கும் சீரியல்களில் இவரே டப்பிங் கொடுப்பாராம். அதேபோல் பாகுபலி சிவகாமி தேவி கேரக்டர் போல் ஒரு ஸ்ட்ராங் ரோலில் நடிக்க வேண்டும் என்பது விருப்பமாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil