கன்னட அறிமுகம்.. தமிழ் சீரியல் மூலம் பாப்புலர் ஆக்டர்.. ராஜபார்வை சாரு பயோகிராபி!

Vijay Tv Actress: சன்டிவியின் விதி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமானவர் ராஜ பார்வை சீரியல் ராஷ்மி ஜெயராஜ்.

Vijay Tv Actress: சன்டிவியின் விதி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமானவர் ராஜ பார்வை சீரியல் ராஷ்மி ஜெயராஜ்.

author-image
WebDesk
New Update
rashmi jayaraj

விஜய் டிவியின் ராஜ பார்வை சீரியலில் சாரு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ரேஷ்மி ஜெயராஜ். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பிறகு மாடலிங் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் ‘ஜோதே ஜோதேயலி’ என்ற கன்னட சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மதுமகலு, ஜஸ்ட் மாத் மாத்தலி போன்ற சீரியல்களில் நடித்தார். கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து கொண்டிருந்தவர் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

Advertisment

சன்டிவியின் விதி சீரியலில் அறிமுகமானார். எனினும் அந்த கேரக்டர் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடரில் தாமரை என்கிற கேரக்டரில் நடித்தார். இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். மாயன் -தேவி ஜோடிக்கு இருந்த ஃபேன்ஸை விட அரவிந்த் - தாமரை ஜோடிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சன்டிவியின் செல்வமகள் மற்றும் கன்னடத்தில் உதயா டிவியில் தேவையானி போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.

Advertisment
Advertisements

ஏராளமான கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் தாமரை கேரக்டரில் நடித்திருந்ததுதான் தமிழில் இவருக்கு பயங்கர ரீச் கொடுத்தது. இவர் கன்னட மொழியில் சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்துவந்தார். சீரியல் நன்றாக சென்றுகொண்டிருந்தபோது கொரோனா குறுக்கிட்டது. இதனால் சீரியல் நிறுத்தப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடங்கப்பட்டாலும் அதில் ரேஷ்மிக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ரேஷ்மி ரிச்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ரேஷ்மி மீண்டும் நடிப்பாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நேரத்தில் விஜய் டிவியின் ராஜ பார்வை சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். ஒரு விபத்தில் பார்வை இழந்த ஹீரோவை திருமணம் செய்து கொள்ளும் கிராமத்து பெண்ணாக ராஷ்மி நடித்துள்ளார். ‘Sanjher Baati’ என பெங்காலி சீரியலில் ரீமேக் தான் இந்த ‘ராஜ பார்வை’ சீரியல் என கூறப்படுகிறது. இந்த தொடரிலும் இவரது சாரு கேரக்டருக்கு நல்ல வரவேற்பு.

தனது குழந்தை பருவத்தில், கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பது ராஷ்மிக்கு மிகவும் பிடித்த ஒன்றாம். ரேஷ்மியை பார்த்தாலே அவருக்கு இன்னசன்ட் கேரக்டர் தான் தருகிறார்களாம். சிறு வயதிலேயே தமிழ் படம் அதிகமாக பார்த்ததால் தமிழ் ஈஸியாக கற்றுக்கொண்டுள்ளார். ரேஷ்மிக்கு பிடித்த நடிகர் சூர்யாதானாம். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மி அவ்வபோது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிர்களிடையே கவனம் பெறுகிறார். நல்ல ரோல் என்றால் பெரிய திரையில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளாராம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: