விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால் வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் டூ தேர்வு வழக்கம்போல் நடக்கும் என்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் 04.03.2025 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 04.03.2025 அன்று ஒரு நாள் மட்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும், மேலும் மாணவ மாணவியர்களுக்கு 04.03.2025 அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 04.03.2025 (செவ்வாய் கிழமை)-க்குப் பதிலாக 15.03.2025 (சனிக்கிழமை) பணி நாள் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.