ஆனிவார ஆஸ்தானம் சிறப்பு பூஜையையொட்டி 2 நாட்கள் மட்டும் வி.ஜ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் பண்டிகை நாட்கள், பெருமாளுக்கு சிறப்பான நாட்கள், பள்ளி விடுமுறை நாட்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்தும் கூட சாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்கு பக்தர்கள் வசதிக்காக சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், ரூ 300 சிறப்பு கட்டண தரிசனம் போன்றவற்றின் மூலம் டிக்கெட் பெற்று சாமி தரிசனம் செய்கின்றனர். இருப்பினும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்த மாதம் இரு நாட்களுக்கு வி.ஜ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனிவார ஆஸ்தானம் 16ஆம் தேதி நடக்கிறது. இதைத் தொடர்ந்து 9ஆம் தேதி கோயிலில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.
9ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெறுவதால் அன்றும் வி.ஜ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, 9ஆம் தேதி, 16ஆம் தேதி வி.ஜ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தானம் போர்ட் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“