/indian-express-tamil/media/media_files/2025/09/12/screenshot-2025-09-12-134155-2025-09-12-13-42-18.jpg)
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனில் மிகவும் அமைதியான, தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுமக்களின் கவனத்திலிருந்து விலக்கிக் கொள்ள விரும்பும் இந்த ஜோடி, தனிமையை முக்கியமாகக் கருதினாலும், அவ்வப்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து நேரம் கழிக்கின்றனர். அதேபோல், விராட் தனது கிரிக்கெட் தோழர்களையும் சந்தித்து உரையாடுவதும் வழக்கம்.
இந்தக் கொண்டே, சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், தனது அணித்தோழி ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து நியூசிலாந்தில் உள்ள ஒரு கஃபேவில் இருந்தபோது, விராட் கோலியை அங்கே சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பு பற்றிய தகவலை ஜெமிமா உற்சாகமாக பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வு, விராட் தனிப்பட்ட வாழ்க்கையை தனிமையாக வைத்தாலும், தன் முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் நண்பர்களுடன் தொடர்பை தக்கவைத்திருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகள் தங்கியிருந்த ஹோட்டலின் கஃபே பகுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த அனுபவம் பற்றி ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேசும்போது, “அந்தக் கஃபேவில் அனுஷ்கா சர்மா இருந்தது இந்த சந்திப்பை மேலும் நினைவுகூரத்தக்கதாக மாற்றியது,” என்று கூறினார். மேலும், விராட் கோலி மற்றும் ஸ்மிருதி மந்தனாவையும் பார்த்து, “நீங்கள் இருவரும் மகளிர் கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வரக்கூடிய சக்தி படைத்தவர்கள். அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன்,” என்று கூறி ஊக்கமளித்ததாகவும், அந்த வார்த்தைகள் தான் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதாகவும் ஜெமிமா பகிர்ந்தார்.
இந்த சந்திப்பின்போது கிரிக்கெட்டில் தொடங்கி வாழ்க்கை, குடும்பம் ஆகியவை குறித்து பேசியதாகவும், நான்கு மணி நேர அரட்டை பழைய நண்பர்களின் மறு சந்திப்பு போல் இருந்ததாகவும் ஜெமிமா விவரித்தார். தொடர்ந்து “கஃபே ஊழியர்கள் எங்களை வெளியேறச் சொன்னதால் மட்டுமே நாங்கள் நிறுத்தினோம்” என்று அவர் புன்னகையுடன் கூறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், மஷாப்பில் இந்தியா உடனான நேர்காணலின் போது இந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா முதன்முதலில் 2013ஆம் ஆண்டு ஒரு விளம்பரப் படப்பிடிப்பின் போது சந்தித்தனர், அதன் பிறகு இருவரும் காதலித்து வந்தனர். பின்னர், 2017 டிசம்பரில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் முக்கியமாகக் கருதும் இந்த பிரபல ஜோடி, தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துப் பரப்புவதை கண்டிப்பாகத் தடுக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.