Advertisment

விருதுநகர் பரோட்டா!!!! என்ன டேஸ்ட் ப்ப்ப்ப்பா...

மத்த பரோட்டா எல்லாம் மிருதுவா, வாய்க்கே வலிக்காத மாறி சாஃப்ட்டா இருக்கும். ஆனால் விருதுநகர் எண்ணெய் பரோட்டா மொரு மொருன்னு இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விருதுநகர் பரோட்டா!!!! என்ன டேஸ்ட் ப்ப்ப்ப்பா...

தமிழ்நாட்டில் பிரியாணிக்கும், பரோட்டாவிற்கும்  போட்டி வைத்தால்  அடித்து சொல்லலாம் பரோட்டா தான் ஜெயிக்கும் என்று. அவ்வளவு பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள் நம்ம ஊர்ல. பரோட்டோவில் பல வகையுண்டு. கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா,சிலோன் புரோட்டா, மலபார் புரோட்டா, காயின் புரோட்டா, வீச்சு புரோட்டா, லாபா புரோட்டா  ன்னு ஒரு லிஸ்டே இருக்கு..

Advertisment

ஆனால், விருதுநகர் பரோட்டாவுக்கு உள்ளுர்ல மட்டும் இல்ல, வெளியூர்லையும் ஃபேன்ஸ் அதிகம். விருதுநகரைக் கடந்து செல்லும் உணவுப் பிரியர்கள் பலரும் விருதுநகர் எண்ணெய் புரோட்டாவை ருசித்துவிட்டே செல்வார்கள்.அப்படி அதில என்ன ஹைலைட்டுன்னா மத்த பரோட்டா எல்லாம்  மிருதுவா, வாய்க்கே வலிக்காத மாறி சாஃப்ட்டா இருக்கும். ஆனால் விருதுநகர் எண்ணெய் பரோட்டா மொரு மொருன்னு இருக்கும்.

பச்சைப் பசேல் இலையில் சுடச்சுட புரோட்டாவை பிச்சுப் போட்டு, அது மேல மண மணக்கும் சால்னாவை ஊற்றி முதல் வாய் சாப்பிடும் வரை பொறுமை இன்றி சாப்பிட்ட அனுபவம் எல்லாருக்குமே உண்டு.  விருதுநகரில் உள்ள  பரோட்டா கடைகளுக்கு சென்று பார்த்தால் தெரியும், மொறுமொறு வெளிப்பகுதியும், மெத்தென்ற உள்பகுதியும் நன்கு வெந்து, தேவையான அளவு எண்ணெயில் குளித்த  எண்ணெய் பரோட்டாவை பார்க்கும் போது என்ன தோணும்னு...

நல்ல பொன்னிறத்தில் மினுமினுப்பாகவும் மொறுமொறுப்பாகவும் எண்ணெய் புரோட்டாவை பார்த்ததுமே  நம்ம ஆளுங்க சாப்பிட தயாராகிடுவாங்க. விருதுநகரில் உள்ள ப’ர்மா கடை’  எண்ணெய் பரோட்டாவிற்கே  காட் ஃபாதர் மாதிரி.  இங்க கடையில்  போடுர எண்ணெய்  பரோட்டோ நாடுக்கோழி சால்னா வாசனை,  ஹவேஸ்ல போரவங்கல கூட கார நிறுத்தி சாப்பிட வைக்குமாம்.

சரி  விருதுநகர் பர்மா கடைக்கு போகாமலே எண்ணெய் பரோட்டா எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா???

எண்ணெய் பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:

 

1. மைதா - 2 கப்

2.கடலை எண்ணெய் -200 கிராம்

3. சர்க்கரை - 1 ஸ்பூன்

4. உப்பு

 

செய்முறை: 

1. முதலில் மைதாவில் உப்பு, சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரும், 50 கிராம் எண்ணெயும் விட்டு, நன்கு கெட்டியாக பிசைய வேண்டும்.

2. பின்பு ஈரத்துணியைக் கொண்டு ஒரு மணி நேரம் மாவை ஊற விட வேண்டும்.

3. அதன் பின்பு மாவை எலுமிச்சை அளவிற்கு உருட்டிக் கொள்ள வேண்டும்.

4.கல்லின் நடுவில் கடலெண்ணெய்யை ஊற்றி நன்கு காயவைக்க வேண்டும். பின்பு கல்லை சுற்றி தட்டி வைத்துள்ள பரோட்டோவை வைக்க வேண்டும்.

5. அதைத் தொடர்ந்து, எண்ணெய் கொதித்ததும் அதில் புரோட்டாக்களைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்க வேண்டும்.  இப்போது எடுத்து சாப்பிட்டால்  அப்படியே உள்ளே போகும்.

Food Recipes Virudhunagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment