உங்களால் அடிக்கடி உடல் பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியவில்லை என்றால், இரவு உணவிற்கு பிற்கு நல்ல நடை பயிற்சி செய்வது அல்லது பிடித்த விளையாட்டை விளையாடுவது, இதுபோன்ற உடல் பயிற்சியை நாம் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
இரவு சாப்பிட்ட பின்பு நடந்தால், இது கியாஸ்டிக் என்சைமை உற்பத்தி செய்யும். இதனால் உணவில் உள்ள சத்துக்களை நமது உடல் எடுத்துகொள்ளும். இதனால் வயிறு உப்புதல், மலச்சிக்கல் ஏற்படாது.
சாப்பிட்ட பின்பு நடந்தால், அதிக கலோரிகள் செலவாகும். இதனால் உங்கள் உடலின் இயக்கம் பாதிகப்படாது.
இதனால் உங்கள் உணவு ஜீரணமாக உதவும். உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாப்பிட்ட பின்பு நடப்பதால் உடலில் உள்ள குளுக்கோஸ் உடலால் பயன்படுத்தப்படும். இதனால் ரத்த சர்க்கரை சீராக இருக்கும்.
நள்ளிரவில் பசி எடிக்காமால் இருக்கும். இரவு சாப்பிட்ட பின்பு நடப்பதால் நமக்கு அதிகம் பசிக்காது. இந்நிலையில் நாம் நன்றாக நடந்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். இதனால் உடலுக்கு மிகவும் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“