சர்க்கரை நோய்க்கு சிறந்த பயிற்சி எது? நடைப்பயிற்சியா? யோகாவா? நிபுணர்கள் விளக்கம்

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது என்பது உணவை மட்டும் சார்ந்தது அல்ல; உடல் இயக்கமும் முக்கியப் பங்காற்றுகிறது. நீரிழிவு அல்லது ப்ரீ-டயாபடீஸ் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளில் நடைப்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை அடங்கும்.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது என்பது உணவை மட்டும் சார்ந்தது அல்ல; உடல் இயக்கமும் முக்கியப் பங்காற்றுகிறது. நீரிழிவு அல்லது ப்ரீ-டயாபடீஸ் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளில் நடைப்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை அடங்கும்.

author-image
WebDesk
New Update
Walking vs yoga

சர்க்கரை நோய்க்கு சிறந்த பயிற்சி எது? நடைப்பயிற்சியா? யோகாவா? நிபுணர்கள் விளக்கம்

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது என்பது உணவை மட்டும் சார்ந்தது அல்ல; உடல் இயக்கமும் முக்கியப் பங்காற்றுகிறது. நீரிழிவு அல்லது ப்ரீ-டயாபடீஸ் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளில் நடைப்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை அடங்கும். இவை இரண்டும் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் எது சிறந்தது என்ற கேள்விக்கு நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

Advertisment

நடைப்பயிற்சி என்பது நேரடியான ஏரோபிக் பயிற்சி. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது உணவுக்குப் பிறகு ரத்த குளுக்கோஸை குறைக்கிறது. மறுபுறம், யோகா என்பது இயக்கம், மூச்சுப்பயிற்சி மற்றும் தளர்வு நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

2 பயிற்சிகளுக்கும் ஆரோக்கியமான வழக்கத்தில் இடம் இருந்தாலும், அவை குறிப்பாக குளுக்கோஸ் அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, மக்கள் மிகவும் பயனுள்ள விருப்பத்தைத் தேர்வுசெய்ய அல்லது இரண்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதை அறிய உதவும்.

Advertisment
Advertisements

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: நடைப்பயிற்சி Vs யோகா

நீரிழிவு கல்வியாளர் மற்றும் ஆலோசகர் உணவு நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா கூறுகையில், "நீரிழிவு (அ) இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை மேலாண்மையில் நடைப்பயிற்சி மற்றும் யோகா இரண்டும் மிக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், யோகா இந்த விஷயத்தில் அதிக நன்மை பயக்கும்" என்கிறார். அவர் மேலும் கூறுகையில், "நடைப்பயிற்சியுடன் ஒப்பிடுகையில், யோகா உண்ணாவிரத ரத்த சர்க்கரை மற்றும் HbA1c அளவைக் குறைக்க முடியும்.

யோகா இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும், கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமானது. நடைப்பயிற்சியைப் போலல்லாமல், யோகா என்பது இலகுரக பயிற்சி, ஆழமான சுவாசம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவற்றின் கலவையாகும். இவை அனைத்தும் சேர்ந்து ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தவும், வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு பங்களிக்கவும் உதவுகின்றன. நடைப்பயிற்சி தசைகளில் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மேம்படுத்தினாலும், உங்களுக்கு நீரிழிவு இருக்கும்போது, யோகாவை உங்கள் செயல்பாட்டில் இணைப்பது உங்கள் உடலுக்கு குளுக்கோஸை சிறப்பாக நிர்வகிக்கவும், நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெறவும் உதவும் என்றார்.

நேரத்தின் முக்கியத்துவம்

யோகா மற்றும் நடைப்பயிற்சி இரண்டும் உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. "சாப்பிட்ட 30-45 நிமிடங்களுக்குப் பிறகு நடப்பது சிறந்தது, ஏனெனில் இந்நேரத்தில் ரத்த குளுக்கோஸ் அளவுகள் உச்சத்தில் இருக்கும். 10 நிமிட குறுகிய நடைப் பயிற்சிகள் நன்றாக இருந்தாலும், 30 நிமிடங்கள் நீண்டகால விளைவுகளுக்கு சிறந்த தீர்வாகும். ஆச்சரியப்படும் விதமாக, நடைப்பயிற்சி தசைகளில் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பயிற்சிக்குப் பிறகும் 24 மணி நேரம் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது," என்று மல்ஹோத்ரா பரிந்துரைக்கிறார்.

உணவுக்குப் பிறகு யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வது, உணவுக்கு பிந்தைய ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும். நடைப்பயிற்சியின் விளைவுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். மேலும், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உண்ணாவிரத இன்சுலினையும் குறைக்கிறது. மல்ஹோத்ரா மேலும், "யோகாவின் விளைவுகள் கணையத்தின் மீதும், மன அழுத்த ஹார்மோன்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி, ரத்த சர்க்கரையை நிலைநிறுத்த உதவும். உணவுக்குப் பிறகு இந்த 2 செயல்பாடுகளையும் இணைப்பதன் நன்மைகள் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகரிக்கின்றன" என்கிறார்.

ரத்த சர்க்கரையை நிலையான அளவில் வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று, நீங்கள் டைப் 2 நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் வாராந்திர அட்டவணையில் நடைப்பயிற்சி மற்றும் யோகாவைச் சேர்ப்பதுதான். நடைப்பயிற்சி மற்றும் யோகா இரண்டும் தனித்தனியாக ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருந்தாலும், இணைந்தால் அவற்றின் விளைவு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர் குறிப்பிடுகிறார். நடைப்பயிற்சி உடல் குளுக்கோஸ் உட்கொள்ளலையும், இதய நிலையையும் மேம்படுத்துகிறது, மேலும் யோகா இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த சர்க்கரையை பாதிக்கக்கூடிய மன அழுத்தத்தின் விளைவுகளைக் கட்டுப்படுத்துகிறது.

"இந்த 2 செயல்பாடுகளையும் இணைப்பது உங்கள் உடற்பயிற்சிகளை வித்தியாசமாக்குகிறது மற்றும் உங்கள் உடலை மாற்றியமைக்கிறது. எந்தவிதமான தேக்கநிலையும் விரைவில் இருக்காது. ரத்த சர்க்கரையை சீராக்குவதில் மிகவும் நிலையான முடிவுகளை அடைய, உங்கள் வாராந்திர வழக்கத்தில் நடைப்பயிற்சியுடன் யோகா பயிற்சியையும் அறிமுகப்படுத்துவதைக் கவனியுங்கள். இது நீரிழிவு நோயை திறம்பட சமாளிக்க பங்களிக்கும் சிறந்த கலவையாகும்," என்று மல்ஹோத்ரா கூறினார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: