காலி வாட்டர் பாட்டில் போதும்… தண்ணீர் தொட்டியில் இருக்கும் அழுக்குகள் சர்னு வெளியேறும்; இந்த டிரிக் டிரை பண்ணுங்க!
வீடுகளில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது என்பது பெரும் தலைவலியாகும். இந்த செய்தியில் சுலபமாக தொட்டியை சுத்தம் செய்வது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
வீடுகளில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது என்பது பெரும் தலைவலியாகும். இந்த செய்தியில் சுலபமாக தொட்டியை சுத்தம் செய்வது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
காலி வாட்டர் பாட்டில் போதும்… தண்ணீர் தொட்டியில் இருக்கும் அழுக்குகள் சர்னு வெளியேறும்; இந்த டிரிக் டிரை பண்ணுங்க!
இப்போது அனைத்து வீடுகளிலும் தண்ணீர் தொட்டி உள்ளது. வீட்டின் அமைப்பைப் பொறுத்து சில வீடுகளில் 2 அல்லது 3 தண்ணீர் தொட்டிகள் கூட உள்ளன. இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை தான் நாம் குடிப்பதற்கும் பயன்படுத்துகிறோம். ஆகவே தண்ணீர் தொட்டிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். ஆனால் அந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரும் வேலையாகும். ஏனெனில் தொட்டியை சுத்தம் செய்ய நிச்சயமாக நிறைய நேரம் எடுக்கும். தொட்டியின் உள்ளே நுழைந்து முழு தொட்டியையும் சுத்தம் செய்ய 2 (அ) 3 மணி நேரம் ஆகும். அதனால்தான் பெரும்பாலான மக்கள் வருடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்கிறார்கள்.
Advertisment
தண்ணீர் தொட்டியை (water tank) சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். தண்ணீர் தொட்டி பாதுகாப்பின்மை, குடிநீர் தரத்தை பாதிக்கக் கூடும். தண்ணீர் தொட்டியை முறையாகப் பராமரிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம். தண்ணீர் தொட்டியை குறைந்தது 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அந்த நீரில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உருவாகும். அந்த நீரைப் பயன்படுத்துவதால் நோய்கள் உருவாகும்.
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது பெரிய வேலை என்று நினைக்கிறீர்களா? இல்லை. ஒரு பிளாஸ்டிக் பாட்டில், ஒரு ஹோஸ் மற்றும் ஒரு மாப் (mop) அல்லது பைப் இருந்தால்போதும். உங்கள் தண்ணீர் தொட்டியை எளிதாக சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்வதற்கு முன்பு தொட்டியில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, சிறிதளவு மட்டும் இருக்குமாறு வைக்க வேண்டும். இப்போது, ரெடி பண்ணி வைத்துள்ள பிளாஸ்டிக் பாட்டில் ஓஸ்-சில் தண்ணீர் நிரப்பிவிட்டு, அதனை தொட்டிக்குள் போட வேண்டும். இப்போது, அழுத்தம் காரணமாக தொட்டிக்குள் இருக்கும் அழுக்குநீர் மேலே வரும். இதன்மூலம் எளிதாக தண்ணீர் தொட்டிக்குள் இருக்கும் அழுக்குகளை அகற்றலாம்.
பராமரிப்பு முறைகள்:தொட்டிக்கு உறுதியான மூடி இருக்க வேண்டும். தூசி, கொசு, பூச்சி மற்றும் மழைநீர் சேர்வதைத் தடுக்கும் வகையில் மூடியை நன்றாகப் பொருத்தி வைக்க வேண்டும். தொட்டியிலுள்ள நீரை முழுமையாக வெளியேற்றி சுத்தம் செய்யவும். உள்ளே உள்ள படிவம், பசை, மண் சேர்க்கை போன்றவை ஸ்கிரப்பர் அல்லது தரை துடைக்கும் தூரிகையால் தேய்த்து அகற்றவும். பின் வெந்நீர் மற்றும் சோப்புடன் தேய்க்கவும். பின்னர் தூய நீரால் நன்றாகக் கழுவி விட வேண்டும். தொட்டியின் வெளியே மற்றும் அதன் அடியில் இருக்கும் குழாய்களை சுத்தமாக வைத்திருக்கவும். தொட்டியின் உள்ளே சேதம் உள்ளதா, உடைபாடு, பிளவு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். மழைக் காலங்களில் குறிப்பாக அதிக கவனம் தேவை. காரணம், தொட்டியில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு அதிகம்.