மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரபோக்கு… ’டிரிபிள் ஏ’ கஷாயம் டிரை பண்ணுங்க; டாக்டர் யோக வித்யா
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய்காலம் இயல்பானதாகத்தான் இருக்கிறதா (அ) அதிக உதிரபோக்கு ஏற்படுகிறதா?என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 30 முதல் 40 மி.லி. வரை ரத்தத்தை இழக்கிறார்கள். உதிரபோக்கை சந்திக்கும் பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம். இந்நிலை பெண்ணுக்கு அதிக கனமான ரத்த போக்கை உண்டாக்குகிறது. இந்த அதிக உதிரபோக்கு இருக்கும் பெண்கள் இதை சமாளிக்க ஒருசில பெண்கள் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 நாப்கின்கள் வரை மாற்றுகிறார்கள்.
Advertisment
அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்கள்:
இளம் வயதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஈஸ்ட்ரோஜெனுக்கும், புரோஸ்ட்ரோஜென்னுக்கும் இடையில் உண்டாகும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இளம் பருவத்தில் கருப்பை செயலிழப்பு, ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றால் அதிக உதிரப்போக்கை உண்டாக்குகிறது. கருப்பை நோய் இருந்தாலும் அல்லது அதிக உடல் எடை கொண்டிருந்தாலும் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம். மேலும் ஹைப்போதைராய்டிசம் தைராய்டு பிரச்சனைகள் இருந்தாலும் உதிரபோக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
’டிரிபிள் ஏ’ கஷாயம் டிரை பண்ணுங்க:
அருகம்புல், அசோகபட்டை, அதிமதுரம் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இதனை கஷாயமாக அருந்தலாம். ஒரு டேபிள் ஸ்பூன் டிரிபிள் ஏ கஷாயம் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி அருந்தலாம். இதனால், ரத்தபோக்கு குறையும். மாதவிடாய் காலத்தில் அதிக உதிரபோக்கு உள்ள பெண்கள், இதனை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் நித்யா. பி.சி.ஓ.எஸ். பிரச்னை உள்ள பெண்கள் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார் மருத்துவர் நித்யா.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.