Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
லைஃப்ஸ்டைல்

‘கேட்பரி ஜெம்ஸ்’ போல பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டால் உடம்புக்கு என்ன ஆகும்? டாக்டர் கூறுவது என்ன?

அடுத்த முறை நீங்கள் டோலோ மாத்திரையை எடுக்கும்போது, சற்று நிறுத்துங்கள். உங்களுக்கு இது உண்மையிலேயே தேவையா என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்? அல்லது உங்கள் உடல் வேறு எதையாவது கேட்கிறதா - ஓய்வு, தண்ணீர் அல்லது அமைதி என வேறு எதையாவது கேட்கிறார் என்று ஆராயுங்கள்.

Written by WebDesk

அடுத்த முறை நீங்கள் டோலோ மாத்திரையை எடுக்கும்போது, சற்று நிறுத்துங்கள். உங்களுக்கு இது உண்மையிலேயே தேவையா என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்? அல்லது உங்கள் உடல் வேறு எதையாவது கேட்கிறதா - ஓய்வு, தண்ணீர் அல்லது அமைதி என வேறு எதையாவது கேட்கிறார் என்று ஆராயுங்கள்.

author-image
WebDesk
18 Apr 2025 20:42 IST

Follow Us

New Update
para

நாம் ஒவ்வொரு நாளும் பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டால் நம் உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்வோம். (கோப்பு)

பெரும்பாலான இந்திய வீடுகளில், பாராசிட்டமால் மாத்திரை சமையல் உப்பு போல சாதாரணமாக இருக்கிறது. அது டோலோ 650 ஆக இருந்தாலும் சரி அல்லது குரோசின் ஆக இருந்தாலும் சரி, இந்த மாத்திரைகள் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சைனஸ் தொந்தரவு மற்றும் தடுப்பூசிக்குப் பிந்தைய அசௌகரியங்களுக்கும் கூட எடுக்கப்படுகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

எனவே, நாம் இந்த மாத்திரைகளை மிகவும் சாதாரணமாக உட்கொள்கிறோமா? என்றால், இதற்கு சுருக்கமான பதில்: ஆம். இதன் விளைவுகள் பலர் நினைப்பதை விட மிகவும் தீவிரமானதாக இருக்கலாம்.

சமீபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம், பிரபல டாக்டர் பால் எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். "இந்தியர்கள் டோலோ 650 ஐ கேட்பரி ஜெம்ஸ் போல எடுத்துக்கொள்கிறார்கள்" என்று அவர் எழுதினார், இது பலருக்குத் தெரிந்த ஆனால் சிலரே கேள்வி கேட்கும் ஒரு உண்மையைப் பிரதிபலித்தது. இந்த வைரல் ட்வீட் பாராசிட்டமால் மீதான நமது அதிகரித்து வரும் சார்புக்கு ஒரு கண்ணாடியாக அமைந்தது - மேலும் அதை அடிக்கடி உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அவசரமான கேள்விகளை எழுப்பியது.

Advertisment
Advertisements

கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் மருந்தியல் தகவல் மையத்தின் மருத்துவ மருந்தாளுநர் டாக்டர் கபில் அத்வானியின் கூறுகையில், “மக்கள் பாராசிட்டமால் மாத்திரை தீங்கு விளைவிக்காதது என்று நினைத்து எடுத்துக்கொள்கிறார்கள், ஏனெனில், இது மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது. ஆனால், உடல் நினைவில் வைத்திருக்கும். வழக்கமாக உட்கொண்டால் அமைதியாக கல்லீரலை சேதப்படுத்தும், சிறுநீரகங்களை சிரமப்படுத்தும், மேலும் இரத்த அழுத்தத்தையும் கூட அதிகரிக்கலாம்.” என்று கூறினார். 

பாராட்டசிட்டமால் அதிகப்படியான அளவு எடுத்துகொண்டால் கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும், இது கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். 

ஏன் இந்த 'பாதுகாப்பான' மாத்திரை ஆபத்தானது

பாராட்டசிட்டமால் உலக அளவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். பெரியவர்களுக்கான அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு நான்கு கிராம் (சுமார் எட்டு 500-மி.கி மாத்திரைகள்). ஆனால், அது ஒரு தினசரி அதிகபட்சம், தினசரி பயன்பாட்டிற்கான பரிந்துரை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, பலர் வாரத்திற்கு பல முறை இதை அதிகம் யோசிக்காமல் எடுத்துக்கொள்கிறார்கள்.

2019-ம் ஆண்டு ஆய்வின்படி, பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் நீண்டகால பயன்பாடு கூட கல்லீரல் நொதிகளின் அளவை அதிகரிக்கலாம், இது கல்லீரல் அழுத்தத்தைக் குறிக்கிறது. மது அருந்துபவர்கள், ஏற்கனவே கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது குறைந்த எடையுள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஒரு தீவிர ஆபத்து.

டாக்டர் அத்வானி கூறிய 2022-ம் ஆண்டு ஆய்வு, ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 கிராம் பாராசிட்டமால் இரண்டு வாரங்களுக்கு உட்கொள்வது ரத்த அழுத்தத்தை உயர்த்தியது என்று கண்டறிந்துள்ளது. அவர் 2015-ம் ஆண்டு முந்தைய ஆய்வையும் மேற்கோள் காட்டினார், இது வழக்கமான பயன்பாட்டை (ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு கிராம்) வயிற்று உபாதைகளுடன் இணைத்தது, மேலும் மூன்று கிராமுக்கு அதிகமான அளவுகள் இரைப்பை இரத்தப்போக்கு அதிக ஆபத்துடன் தொடர்புடையதாக இருந்தது.

மேலும், கவலை அளிக்கும் வகையில், நீண்டகால பயன்பாடு இப்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அதிக வாய்ப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு. 2019-ம் ஆண்டு ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றொரு மறைக்கப்பட்ட ஆபத்து.

யார் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

பாராட்டசிட்டமால் உலக அளவில் பாதுகாப்பானதாகத் தோன்றினாலும், சில குழுக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்:

கல்லீரல் நோய் உள்ளவர்கள் அல்லது அடிக்கடி மது அருந்துபவர்கள்: சாதாரண அளவுகள் கூட ஆபத்தானதாக இருக்கலாம்.

குறைந்த எடையுள்ள நபர்கள் (<50 கிலோ): நிலையான அளவுகள் அதிகமாக இருக்கலாம்.

சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள்: படிப்படியாக சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள்: நீண்டகால பயன்பாடு குழந்தையின் இதய வளர்ச்சியில் தீவிரமான அபாயங்களுடன் தொடர்புடையது (2019 ஆய்வு).

ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை (வார்ஃபரின் போன்றவை) உட்கொள்பவர்கள்: நீண்டகால பயன்பாடு ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கலாம்.

நோய்வாய்ப்பட்ட பிறகு வலிமையையும் ஆற்றலையும் மீட்டெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் நீங்கள் நீண்டகால வலியுடன் போராடுகிறீர்கள் என்றால், பாதுகாப்பான, மருந்து அல்லாத விருப்பங்களை ஆராயுங்கள்.

தினசரி மருந்துகளில் மறைந்திருக்கும் அளவுகள்

இந்தியாவில் ஒரு பெரிய பிரச்னையாக மறைந்திருக்கிறது பாராசிட்டமால். இது பல சளி மற்றும் காய்ச்சல் மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ளது, எனவே உங்களுக்குத் தெரியாமல், உங்கள் தினசரி அளவை இரட்டிப்பாக்கவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரிக்கலாம். 2021-ம் ஆண்டு மதிப்பாய்வின்படி, டாக்டர் அத்வானி பாராசிட்டமால் முதுகு அல்லது மூட்டு வலி போன்ற நாள்பட்ட பிரச்சினைகளுக்குக் கூட சரியாக வேலை செய்யாது என்று கூறினார் - ஆனாலும், மக்கள் இந்த நிலைகளுக்கு இதைப் பயன்படுத்துகிறார்கள், சிறந்த மாற்றுகளை புறக்கணிக்கிறார்கள்.

எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? டாக்டர் அத்வானி அறிவுறுத்துகிறார், “உண்மையில் தேவைப்படும்போது மட்டுமே பாராசிட்டமலை எடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான சாதாரண காய்ச்சல் மற்றும் வலிகளுக்கு, ஓய்வு, நீர்ச்சத்து அல்லது மூலிகை தேநீர் கூட போதுமானதாக இருக்கும்.” என்று கூறுகிறார்.

நீங்கள் நீண்டகால வலியுடன் போராடுகிறீர்கள் என்றால், பாதுகாப்பான, மருந்து அல்லாத விருப்பங்களை ஆராயுங்கள்: பிசியோதெரபி, யோகா, மென்மையான உடற்பயிற்சி அல்லது மருத்துவர் அங்கீகரித்த கூடுதல் மருந்துகளை ஆராயுங்கள். எப்போதும் மருந்து லேபிள்களைப் படியுங்கள், மேலும், உங்களுக்கு ஏற்கனவே பிற சுகாதார பிரச்னைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை கேளுங்கள்.

எனவே அடுத்த முறை நீங்கள் அந்த டோலோ மாத்திரையை எடுக்கும்போது, சற்று நிறுத்துங்கள். உங்களுக்கு இது உண்மையிலேயே தேவையா என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்? அல்லது உங்கள் உடல் வேறு எதையாவது கேட்கிறதா - ஓய்வு, தண்ணீர் அல்லது பொறுமை போன்றவற்றை கேட்கிறதா என்று ஆராயுங்கள்?

பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை பொது களத்தில் உள்ள தகவல்கள் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. எந்தவொரு விஷயத்தையும் தொடங்குவதற்கு முன்பு எப்போதும் உங்கள் சுகாதார நிபுணரின் ஆலோசனையைக் கேளுங்கள்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!