ஆரஞ்சு பழத்தில் அதிக உடலுக்கு நன்மை தரும் பல விஷயங்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பயன்கள் உள்ளது. இது சளி மற்றும் இருமல், ப்ளூ காய்ச்சல் ஏற்படமால் பார்த்துகொள்ளும்.
இதில் உள்ள வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும். இதில் ஆண்டி ஆக்ஸிண்ட், நார்சத்து, மினரல்ஸ் உள்ளது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளபநாய்ட்ஸ், கரொடிநாய்ட்ஸ் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக இதன் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து தீவிர நோய் நம்மை பாதிக்காமல் பார்த்துகொள்ளும்.
குளிர்காலத்தில் நாம் ஆரஞ்சை தொடர்ந்து சாப்பிட்டால், நமது சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். வரட்சி ஏற்படாது. இதில் அதிக நீர் சத்து உள்ளதால், நமது உடலில் உள்ள நீரின் அளவை சீராக வைத்திருக்கும்.
இதில் உள்ள நார்சத்து, நமது ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். இந்நிலையில் இதை அதிகமாக சாப்பிட்டால், ஜீரண பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள் இதை தவிர்க்கலாம். மேலும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இதை தவிர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“