புதினா என்பது நமக்கு புத்துணர்வை கொடுக்கும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புதினாவை தினமும் எடுத்துகொண்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். ஒரு குறிப்பிட்ட அளவு என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை நாம் குடிக்கும் டீ, சாலடில், சமையக்கும் ரெசிப்பிகளில் பயன்படுத்தலாம்.
வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும். நமது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வை கொடுத்து, ஜிரண பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். இதை நம் வாயில் போட்டு மென்றால் நல்ல மணம் கொடுக்கும். வாய் துர்நாற்றத்தை குறைக்கும்
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது உடலை சேதத்திலிருந்து நம்மை காப்பற்றும். இதன் நல்ல மணம் நமது மூளையை தூண்டும். இதனால் நன்றாக யோசித்து செயலாற்றும் வேலை மூளையில் நடைபெறும்.
மேலும் இதை அதிகமாக எடுத்துகொண்டால் அல்லது சிலருக்கு சரிவரவில்லை என்றால் தலைவலி, தொண்டையில் ஏறிவருதல் போன்ற ஆசிட் ரிப்ளக் ஏற்படும்.
இதுபோல சிலருக்கு புதினா சாப்பிட்டால் , சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம். இதுபோல சிறு குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“