நாம் ஒரு மாதம் வரை புகைப்பிடிக்காமல் இருந்தால், நமது சக்தி அதிகமாகும். நன்றாக தூக்கம் வரும். நுரையீரல் செயல்பாடு மேம்படும். நாம் புகைப்பழக்கத்தை விடத் தொடங்கியதுமே, உடலில் உள்ள நஞ்சுகள் வெளியேறும். ரத்த ஓட்டம் சீராகும். இதய ரத்த குழாய்யை பாதிக்கும் நோய் குறையும்.
நுரையீரல் செயல்பாடு மேம்படும். சுவாசிப்பதற்கு தெளிவான சுவாசப் பாதை இருக்கும். பாதியில் நஞ்சுகள் இருக்காது. இதனால் இருமல் குறையும். இதனால் வாழ்க்கை தரம் உயரும்.
இதுபோல ஒரு மாதம் வரை நாம் புகைப்பிடிக்காமல் இருந்தால், உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இதய நோய், பக்கவாதம் ஏற்படாமல் இருக்கும்.
தொடர்ந்து புகைப்பிடித்ததால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நுரையீரல் மீட்கப்படும். பாதிப்பை ஏற்படுத்தும் நஞ்சுகள் நீங்குவதால் நுரையீரலின் செய்லபாடு அதிகரிக்கும்.
உடலில் எப்படி மாற்றங்கள் ஏற்படுவது போல் மனரீதியான மாற்றங்கள் ஏற்படும். நிக்கோடின் குறைவதால், நாம் இன்னும் தெளிவாக, கூர்மையாக விஷயங்களை செய்யலாம். இதனால் மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படாது.
இரவில் சீக்கிரமாக தூக்கம் வரும். மேலும் பாதி இரவில் எழுந்துகொள்ளும் நிலை மாறும். அதிக சக்தி உடன் பணியாற்ற இயலும். உடல் பயிற்சி மற்றும் நல்ல உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“