நாம் பொதுவாக கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட் நன்றாக குறைத்து பழங்கள், சர்க்கரை, சாக்லேட்டை சாப்பிடாமல் இருப்போம். இந்த டயட்டை நாம் வழக்கமாக பின்பற்றுவோம்.
இந்நிலையில் 7 நாளைக்கு வெறும் தண்ணீரை எடுத்துகொண்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம். ஒரு வாரம் முழுவதுமாக தண்ணீர் மட்டும் குடித்து வந்தால், சத்து குறைபாடு, எலக்ட்ரோலைட் இழப்பு, சதை வலுவிழப்பு ஏற்படலாம். இந்நிலையில் இதில் நன்மைகளும் உண்டு.
இந்நிலையில் சில நன்மைகளும் இதனால் ஏற்படும் . 2 ம் நாளில் மிகவும் எடை இழந்தது போல உணர்வு இருக்கும். 3ம் நாளில் மிகவும் சோர்வாக, மெதுவாக செயல்பட்டால் உடனே இந்த டயட்டை நிறுத்திவிட்டு. உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில் உங்கள் உடலுக்கு சரிவந்தால் தொடர்ந்து பின்பற்றலாம். இந்நிலையில் நாம் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலில் உள்ள ஆட்டோபியாகிக் செய்முறை தூண்டப்படும். இதனால் உடலில் உள்ள சேதமான செல்கள், ஆரோக்கியமான செல்களால் மாற்றம் செய்யப்படும்.
இதுபோல நாம் உடலில் உள்ள கொழுப்பு சத்தை சக்தியாக மாற்றி ஒட்டிமொத்த உடல் இயக்கத்திற்கும் பயன்படுத்துகிறது. இது நாம் சாப்பிடாமல் இருக்கும்போது நடக்கும் இயற்கையான விஷயம்.
உடலில் உள்ள கொழுப்பை பயன்படுத்துவதால், மற்றும் குறைந்த கலோரிகல் மட்டுமே எடுத்து கொள்வதால் உடல் எடை குறையும். உடல் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் ரத்த குளுக்கோஸ் அளவு குறையும்.
உடலில் உள்ள நஞ்சுகளை, இது வெளியேற்றுகிறது. மேலும் உடலில் உள்ள நஞ்சுகளை வெளி ஏற்றும் தன்மைக்கு உதவியாக இருக்கும். நமது ஜீரண மண்டலத்திற்கு அதிக வேலை இருக்காது, என்பதால் தன்னை தானெ சரிபடுத்திகொள்ளும் வாய்ப்புள் உண்டு.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“