மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்: 300 பேர் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கத்தான் இத்தகைய மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது என மருத்துவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கத்தான் இத்தகைய மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது என மருத்துவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
New Project - 2024-1

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

10 கிமீ, 5 கிமீ, 3 கிமீ மற்றும் 1கிமீ என நான்கு வெவ்வேறு பிரிவுகளில் இந்த ஆண்டு போட்டி நடைபெற்றது. 

WhatsApp Image 2024-12-01 at 12.06.27

Advertisment
Advertisements

நரம்பியல் குழந்தைகளுக்காக 1 கிமீ வகை மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 3 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ பிரிவுகளில் இதில் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024-12-01 at 12.06.28

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைத்து பங்குபெற சரியான உள்கட்டமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது. திறன் என்பது ஊனத்திலிருந்து வேறுபட்டது என்ற புரிதலை உணர்த்தும் வகையில் இந்த முயற்சி செயல்படும் என மருத்துவர் ராஜசேகர் தெரிவித்தார்.  

WhatsApp Image 2024-12-01 at 12.06.30

சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து 2018ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சியை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்தில் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: