கருவேப்பிலை உடன் இதை சேர்த்து சாப்பிட்டால்தான் முடி கருப்பாகும்; டாக்டர் நித்யா
நரைமுடி வருவதற்கு காரணம் என்ன? இளம் வயதிலேயே நரைமுடி வந்தால் எப்படி குணப்படுத்துகிறது? 35 முதல் 40 வயதிற்குள் நரைமுடி வந்தால் அதனை மீண்டும் கருப்பாக மாற்றலாம். அதற்கான உணவு முறைகள் என்னென்ன? என்று விளக்குகிறார் மருத்துவர் நித்யா.
நரைமுடி வருவதற்கு காரணம் என்ன? இளம் வயதிலேயே நரைமுடி வந்தால் எப்படி குணப்படுத்துகிறது? 35 முதல் 40 வயதிற்குள் நரைமுடி வந்தால் அதனை மீண்டும் கருப்பாக மாற்றலாம். அதற்கான உணவு முறைகள் என்னென்ன? என்று விளக்குகிறார் மருத்துவர் நித்யா.
கருவேப்பிலை உடன் இதை சேர்த்து சாப்பிட்டால்தான் முடி கருப்பாகும்; டாக்டர் நித்யா
நரைமுடி வருவதற்கு காரணம் என்ன? இளம் வயதிலேயே நரைமுடி வந்தால் எப்படி குணப்படுத்துகிறது? 35 முதல் 40 வயதிற்குள் நரைமுடி வந்தால் அதனை மீண்டும் கருப்பாக மாற்றலாம். அதற்கான உணவு முறைகள் என்னென்ன? என்று விளக்குகிறார்.
Advertisment
முடிவேர்களில் பிரச்னை என்றால் எத்தனை முறை மொட்டை அடித்தாலும், திரும்பவும் வெண்மையாகத் தான் முளைக்கும். நரைமுடிக்கு வராமல் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உப்பு மற்றும் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கக் கூடிய உணவுகள், பாக்கெட்ல அடைத்து விற்கக் கூடிய ஸ்நாக்ஸ் தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் டாக்சின் அளவு அதிகரிக்கும் போதும்m, சத்து குறைபாடு உள்ளபோதும் உடலின் தோலில்தான் அதன் மாற்றங்கள் வெளிப்பட்டு நரைமுடி ஏற்படுவதற்கு காரணமாகிறது என்கிறார் மருத்துவர் நித்யா.
நரைமுடி ஏற்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் தலைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. சரியான அளவில் ஊட்டச்சத்து தலைமுடிகளுக்குப் போகாததால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், முடி வேர்கள் வலுவிழந்து தலைமுடி உதிர்தல், நரைமுடி போன்ற பிரச்னை ஏற்படுகிறது. சாப்பிடக்கூடிய உணவில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஜிங்க் போன்றவை இருப்பது அவசியம். ஜிங்க் அளவு குறைவதால் நரைமுடி ஏற்படுகிறது என்கிறார் மருத்துவர் நித்யா.
கறிவேப்பிலையை நன்றாக கழுவிவிட்டு நிழலில் உளர்த்தி எடுத்து அதனை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை பொடி 100 கிராம், சீரகபொடி 10 கிராம் சேர்த்து அதனுடன் 5 கிராம் பெருங்காயம் சேர்த்து, தினமும் காலையில் உணவுக்கு முன்பு, அரை ஸ்பூன் (5 கிராம்) அளவுக்கு நெய் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும் என்கிறார் மருத்துவர் நித்யா.
Advertisment
Advertisements
யாரெல்லாம் நெய்யில் சாப்பிட வேண்டும், யாரெல்லாம் தேனில் சாப்பிட வேண்டும். குழந்தைகள் உடல் அதிக வெப்பமாக இருப்பதால் அவர்களுக்கு நெய்யுடன் கலந்து கொடுக்க்கலாம். அதிக உடல் உஷ்ணம், கண் எரிச்சல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நெய்யில் கலந்து சாப்பிடலாம். ஏற்கனவே இரத்தசோகை உள்ளவர்கள் தேனில் கலந்து சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வருவதால் முடி மீண்டும் கருப்பாக மாறிவரும் என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news