/indian-express-tamil/media/media_files/2024/11/08/CyyGEsA7NjqsYaHrp7U1.jpg)
பால் நன்மைகள் கொடுக்கிறது என்றாலும் அதை யார் குடிக்கலாம், யார் தவிர்க்கலாம் என்பது பற்றி மருத்துவர் சுதா சேஷய்யன் கூறியுள்ளார். அவர் பேசுகையில், 6000, 7000 வருடங்களாகவே புதிய கற்காலத்தில் இருந்தே மக்கள் மாடுப் பாலை தங்களுடைய உணவில் எடுத்துக் கொள்கிறார்கள்.
பாலில் நிறைய சத்துகள் உள்ளன. பால் குடிப்பால் ஆற்றல் கிடைக்கிறது. 1 டம்பர் பாலில் 125 கிலோரிஸ் கிடைத்து விடும். பாலில் லேக்டோஸ் என்ற சுகர் உள்ளது. இது உடலுக்கு சென்ற உடன் குளுக்கோஸ் ஆக மாறிவிடுகிறது. அதனால் எனர்ஜி கிடைக்கிறது. அதோடு பாலில் புரதம், நல்ல கொழுப்பு சத்து உள்ளது.
வளர் இளம் குழந்தைகள் பால் குடிக்கலாம். எலும்பு, பற்கள் வலிமை பெறும். தசைகளின் வளர்ச்சிக்கும் பால் உதவும். அதே நேரம் வயது ஏற ஏற பால் குடிப்பது அதில் உள்ள லேக்டோஸ் இரத்த குளுக்கோஸா மாறும் போது திடீரென சுகர் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு இது பிரச்சனையாகும். அவர்களுக்கு தெரியாமலையே அதிகரிக்கும்.
காஃபியில் உள்ள பாலும் சுகர் அதிகரிக்க காரணியாகும். 1 டம்ளர் என்றாலும் அதில் உள்ள பால் கலோரியயை அதிகரிக்கும், குளுக்கோஸ், கொழுப்பு அதிகரிக்கும். அதனால் வயது ஏற ஏற பால் எடுத்துக் கொள்வதை குறைத்து விடுங்கள் என்று மருத்துவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.