இளநீரில் பொட்டாஷியம், மெக்னீஷியம், எலக்ட்ரோலைட் உள்ளது. இந்நிலையில் இத்துடன் சப்ஜா விதைகளை நாம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
இதில் கரையும் நார்சத்து உள்ளது. இது நம்மை வரட்சியிலிருந்து காப்பாற்றும் . இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் சர்க்கரை கலந்த குளிர்பனங்களைவிட இது நல்லது.
சப்ஜா விதைகள் இயற்கையாக குளிர்ச்சிதன்மை கொண்டது. இது ரத்த சர்க்கரையை குறைக்கும். மேலும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். மேலும் நமது உடல் அதிக வெப்பமாக மாறினால் இது பார்த்துக்கொள்ளும்.
இதில் நார்சத்து இருப்பாதால், ஆசிட்டி, ஜீரண பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். இதில் இருக்கும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட் உடல் எடையை குறைக்க உதவும்.
இந்நிலையில் இந்த பானத்தை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம். அரை ஸ்பூன் சப்ஜா விதைகளை அரை கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இதை ஒரு கிளாஸ் இளநீரில் சேர்த்து குடிக்கவும். இதை நாம் காலை 11 மணிக்கு அல்லது மாலை 4 மணிக்கு குடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“